Just In
- 1 hr ago
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- 2 hrs ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 4 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
- 5 hrs ago
ரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க!
Don't Miss!
- News
திருவண்ணாமலை திருவூடல் திருவிழா: நந்திக்கு தரிசனம் தந்த அண்ணாமலையார் - சூரியனுக்கும் காட்சி
- Automobiles
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Lifestyle
கோதுமை ரவை பாயாசம்
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எத்தனை தமிழ் ராக்கர்ஸ் வந்தாலும் தமிழ் சினிமாவை அழிக்க முடியாது: அருண் விஜய்

நாகர்கோவில்: எத்தனை தமிழ் ராக்கர்ஸ் வந்தாலும் தமிழ் சினிமாவை அழிக்க முடியாது என்று நடிகர் அருண் விஜய் தெரிவித்தார்.
அருண் விஜய் நடித்து வெளியான தடம் படம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ராஜாஸ் மால் திரையரங்கில் திரையிடப்பட்டு உள்ளது. இதனிடையே படம் மக்கள் மத்தியில் எந்த அளவில் பிரபலம் அடைந்து உள்ளது என்பதை தெரிந்து கொள்ளவும், படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அருண் விஜய், நடிகை தன்யா கோப், இயக்குநர் மகிழ் திருமேனி ஆகியோர் தமிழகம் முழுவதும் சென்று ரசிகர்களை சந்தித்து வருகின்றனர்.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் வந்த அவர்கள் ராஜாஸ் மால் திரையரங்கில் ரசிகர்களை சந்தித்தனர். அப்போது அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
செய்தியாளர்களை சந்தித்த அருண் விஜய் கூறியதாவது,
பொள்ளாச்சி வீடியோவை பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது: ஜி.வி. பிரகாஷ், சித்தார்த்
தமிழக மக்கள் என் மீது காட்டிய அன்பும் எனதுபடத்திற்கு காட்டிய வரவேற்ப்பும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. ரசிகர்கலாலேயே நான் வளர்ச்சி அடைந்தேன், அவர்கள் இல்லை என்றால் நான் இல்லை. ஒரு திரைப்படம் தயாரிக்கப்படுவது முதல் திரையிடப்படும் வரை நூற்றுக்கணக்கானவர்களின் கடின உழைப்பு அதில் உள்ளது. அப்படி வெளிவரும் படத்தை ரசிகர்கள் பார்த்தால் தான் நடிகர்கள் முதல் அனைவரும் வாழ முடியும். ஆனால் படத்தை திருடி அந்த உழைப்பிற்கு சிலர் பாதிப்பை ஏற்படுத்துகின்றனர்.

தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களை முடக்க கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும். வரும் காலத்தில் அது போன்ற சட்டங்கள் இயற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. பொதுமக்கள் தான் சிந்தித்து திரையரங்குகளுக்கு சென்று திரைப்படங்களை காண வேண்டும். எத்தனை தமிழ் ராக்கர்ஸ் வந்தாலும் தமிழ் சினிமாவை அழிக்க முடியாது. தமிழ் சினிமா நிலைத்து நிற்கும்.

எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என்றாலும் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வருவதை வாழ்த்தி வரவேற்கிறேன். அரசியலில் கவனம் தேவை, நடிகர்கள் அரசியலுக்கு வருவது அரசியலில் ஆரோக்கியமானது என்றார்.