Don't Miss!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- News "மேட்டர் ரொம்ப சீரியஸ்!" மீண்டும் இந்தியாவை சீண்டும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ! என்ன தான் நடக்குது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
எத்தனை தமிழ் ராக்கர்ஸ் வந்தாலும் தமிழ் சினிமாவை அழிக்க முடியாது: அருண் விஜய்
Recommended Video
நாகர்கோவில்: எத்தனை தமிழ் ராக்கர்ஸ் வந்தாலும் தமிழ் சினிமாவை அழிக்க முடியாது என்று நடிகர் அருண் விஜய் தெரிவித்தார்.
அருண் விஜய் நடித்து வெளியான தடம் படம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ராஜாஸ் மால் திரையரங்கில் திரையிடப்பட்டு உள்ளது. இதனிடையே படம் மக்கள் மத்தியில் எந்த அளவில் பிரபலம் அடைந்து உள்ளது என்பதை தெரிந்து கொள்ளவும், படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அருண் விஜய், நடிகை தன்யா கோப், இயக்குநர் மகிழ் திருமேனி ஆகியோர் தமிழகம் முழுவதும் சென்று ரசிகர்களை சந்தித்து வருகின்றனர்.
அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் வந்த அவர்கள் ராஜாஸ் மால் திரையரங்கில் ரசிகர்களை சந்தித்தனர். அப்போது அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
செய்தியாளர்களை சந்தித்த அருண் விஜய் கூறியதாவது,
பொள்ளாச்சி வீடியோவை பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது: ஜி.வி. பிரகாஷ், சித்தார்த்
தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களை முடக்க கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும். வரும் காலத்தில் அது போன்ற சட்டங்கள் இயற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. பொதுமக்கள் தான் சிந்தித்து திரையரங்குகளுக்கு சென்று திரைப்படங்களை காண வேண்டும். எத்தனை தமிழ் ராக்கர்ஸ் வந்தாலும் தமிழ் சினிமாவை அழிக்க முடியாது. தமிழ் சினிமா நிலைத்து நிற்கும்.
எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என்றாலும் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வருவதை வாழ்த்தி வரவேற்கிறேன். அரசியலில் கவனம் தேவை, நடிகர்கள் அரசியலுக்கு வருவது அரசியலில் ஆரோக்கியமானது என்றார்.