Don't Miss!
- Finance இனி சுங்கச் சாவடிகளில் நிற்க வேண்டியதில்லை! வருகிறது ஜிபிஎஸ் தொழில்நுட்பம்..!
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Sports வீடியோ- கட்டி பிடிக்க வந்த மலிங்கா.. தள்ளி விட்ட ஹர்திக் பாண்டியா..மும்பை அணியில் என்ன தான் நடக்குது
- News "மத்திய அரசை விமர்சிக்காதது ஏன்?" இரண்டு நொடி கேப் விட்டு.. எடப்பாடி பழனிசாமி தந்த விளக்கம்
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
எத்தனை தமிழ் ராக்கர்ஸ் வந்தாலும் தமிழ் சினிமாவை அழிக்க முடியாது: அருண் விஜய்
Recommended Video
நாகர்கோவில்: எத்தனை தமிழ் ராக்கர்ஸ் வந்தாலும் தமிழ் சினிமாவை அழிக்க முடியாது என்று நடிகர் அருண் விஜய் தெரிவித்தார்.
அருண் விஜய் நடித்து வெளியான தடம் படம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ராஜாஸ் மால் திரையரங்கில் திரையிடப்பட்டு உள்ளது. இதனிடையே படம் மக்கள் மத்தியில் எந்த அளவில் பிரபலம் அடைந்து உள்ளது என்பதை தெரிந்து கொள்ளவும், படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அருண் விஜய், நடிகை தன்யா கோப், இயக்குநர் மகிழ் திருமேனி ஆகியோர் தமிழகம் முழுவதும் சென்று ரசிகர்களை சந்தித்து வருகின்றனர்.
அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் வந்த அவர்கள் ராஜாஸ் மால் திரையரங்கில் ரசிகர்களை சந்தித்தனர். அப்போது அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
செய்தியாளர்களை சந்தித்த அருண் விஜய் கூறியதாவது,
பொள்ளாச்சி வீடியோவை பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது: ஜி.வி. பிரகாஷ், சித்தார்த்
தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களை முடக்க கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும். வரும் காலத்தில் அது போன்ற சட்டங்கள் இயற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. பொதுமக்கள் தான் சிந்தித்து திரையரங்குகளுக்கு சென்று திரைப்படங்களை காண வேண்டும். எத்தனை தமிழ் ராக்கர்ஸ் வந்தாலும் தமிழ் சினிமாவை அழிக்க முடியாது. தமிழ் சினிமா நிலைத்து நிற்கும்.
எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என்றாலும் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வருவதை வாழ்த்தி வரவேற்கிறேன். அரசியலில் கவனம் தேவை, நடிகர்கள் அரசியலுக்கு வருவது அரசியலில் ஆரோக்கியமானது என்றார்.