Don't Miss!
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
காஞ்சனா 3 வசூலில் மண்ணை அள்ளிப் போட்ட தமிழ் ராக்கர்ஸ்: இனி யாரும் விஷாலை கேட்க முடியாது
Recommended Video
சென்னை: காஞ்சனா 3 படத்தின் வசூலில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ்.
ராகவா லாரன்ஸ் இயக்கி, தயாரித்து, நடித்த காஞ்சனா 3 படம் வெள்ளிக்கிழமை ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கதையில் புதிதாக எதுவும் இல்லை என்றாலும் குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் என்று படத்தை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
படத்தை பார்க்க குடும்பம், குடும்பமாக தியேட்டர்களுக்கு செல்கிறார்கள்.
கர்ப்பிணியின் வயிறை எப்படி தொடலாம்?: நடிகரை விளாசும் நெட்டிசன்ஸ்
கோலிவுட்
பேய் படம் என்றாலே கோலிவுட் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்து அதை ஹிட்டாக்காமல் ஓய மாட்டார்கள். காஞ்சனா 3 மட்டும் அதற்கு விதிவிலக்கு அல்ல.இந்நிலையில் காஞ்சனா 3 படத்தின் வசூல் பாதிக்கும் வகையில் தமிழ் ராக்கர்ஸ் ஒரு காரியம் செய்துள்ளது.
காஞ்சனா 3
காஞ்சனா 3 படத்தை ஆன்லைனில் கசியவிட்டுவிட்டது தமிழ் ராக்கர்ஸ். இதனால் வார இறுதி நாட்களில் தியேட்டர்களுக்கு செல்ல நினைத்த பலர் ஆன்லைனில் படத்தை பார்த்துவிடுவார்கள்.
பிரச்சனை
சூப்பர் ஸ்டார் படம் வந்தால் கூட ரிலீஸான சில மணிநேரங்களில் அதை ஹெச்.டி. பிரிண்ட்டில் கசியிவிட்டு படக்குழுவை அதிர்ச்சி அடைய வைக்கிறது தமிழ் ராக்கர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. சில இயக்குநர்கள் படத்தை ரிலீஸ் செய்யும் முன்பு தமிழ் ராக்கர்ஸிடம் கோரிக்கை விடுத்த சோகம் எல்லாம் நடந்துள்ளது.
தமிழக அரசு
தமிழ் ராக்கர்ஸை விஷால் அடக்குவார் என்று எதிர்பார்த்தால் அவர் தமிழக அரசிடம் அந்த பொறுப்பை விட்டுவிட்டு நைசாக நழுவிக் கொண்டார். இல்லை என்றால் புதுப்படம் வெளியாகும்போது எல்லாம் தன்னை தானே கேள்வி கேட்பார்கள்.