Don't Miss!
- Technology சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- Automobiles ஏர் இந்தியாவின் கடைசி போயிங் 747 விமானம்!! மும்பை ஏர்போர்டில் இருந்து...
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
காஞ்சனா 3 வசூலில் மண்ணை அள்ளிப் போட்ட தமிழ் ராக்கர்ஸ்: இனி யாரும் விஷாலை கேட்க முடியாது
Recommended Video
சென்னை: காஞ்சனா 3 படத்தின் வசூலில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ்.
ராகவா லாரன்ஸ் இயக்கி, தயாரித்து, நடித்த காஞ்சனா 3 படம் வெள்ளிக்கிழமை ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கதையில் புதிதாக எதுவும் இல்லை என்றாலும் குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் என்று படத்தை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
படத்தை பார்க்க குடும்பம், குடும்பமாக தியேட்டர்களுக்கு செல்கிறார்கள்.
கர்ப்பிணியின் வயிறை எப்படி தொடலாம்?: நடிகரை விளாசும் நெட்டிசன்ஸ்
கோலிவுட்
பேய் படம் என்றாலே கோலிவுட் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்து அதை ஹிட்டாக்காமல் ஓய மாட்டார்கள். காஞ்சனா 3 மட்டும் அதற்கு விதிவிலக்கு அல்ல.இந்நிலையில் காஞ்சனா 3 படத்தின் வசூல் பாதிக்கும் வகையில் தமிழ் ராக்கர்ஸ் ஒரு காரியம் செய்துள்ளது.
காஞ்சனா 3
காஞ்சனா 3 படத்தை ஆன்லைனில் கசியவிட்டுவிட்டது தமிழ் ராக்கர்ஸ். இதனால் வார இறுதி நாட்களில் தியேட்டர்களுக்கு செல்ல நினைத்த பலர் ஆன்லைனில் படத்தை பார்த்துவிடுவார்கள்.
பிரச்சனை
சூப்பர் ஸ்டார் படம் வந்தால் கூட ரிலீஸான சில மணிநேரங்களில் அதை ஹெச்.டி. பிரிண்ட்டில் கசியிவிட்டு படக்குழுவை அதிர்ச்சி அடைய வைக்கிறது தமிழ் ராக்கர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. சில இயக்குநர்கள் படத்தை ரிலீஸ் செய்யும் முன்பு தமிழ் ராக்கர்ஸிடம் கோரிக்கை விடுத்த சோகம் எல்லாம் நடந்துள்ளது.
தமிழக அரசு
தமிழ் ராக்கர்ஸை விஷால் அடக்குவார் என்று எதிர்பார்த்தால் அவர் தமிழக அரசிடம் அந்த பொறுப்பை விட்டுவிட்டு நைசாக நழுவிக் கொண்டார். இல்லை என்றால் புதுப்படம் வெளியாகும்போது எல்லாம் தன்னை தானே கேள்வி கேட்பார்கள்.