Don't Miss!
- Finance பெங்களூரு டிராபிக்: மலைப்போல நம்பப்படும் புதிய சேவை.. இதுமட்டும் நடந்துட்டா, வேற லெவல் தான்..!!
- News "டிட்டோ" கருணாநிதி.. கலைஞரை ஞாபகப்படுத்துகிறார் உதயநிதி.. இது புதிய மைல்கல்.. திமுகவுக்கு மகிழ்ச்சி
- Technology வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பிகில் அதிகாலை சிறப்பு காட்சி.. தமிழக அரசு திட்டவட்ட அறிவிப்பு!
பிகில் படத்தின் அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்படாது என தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: பிகில் படத்தின் சிறப்பு காட்சி குறித்து தமிழக அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா, கதிர் உள்ளிட்டோர் நடித்துள்ள பிகில் திரைப்படம் நாளை ரிலீசாகிறது. இப்படத்தை எதிர்பார்த்து விஜய் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.
பொதுவாக பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு அவர்களின் ரசிகர்களுக்காக ரிலீஸ் தினத்தன்று அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்படும். இது பல வருடங்களாக நடைமுறையில் இருந்து வருகிறது.
ஆனால் சமீபகாலமாக தியேட்டர் உரிமையாளர்களும், திரைப்பட தயாரிப்பாளர்களும் அதிகாலை சிறப்பு காட்சி என்ற பெயரில் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்து, கொள்ளை லாபம் பார்ப்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றமும், தியேட்டர்களில் அதிகாலைக்காட்சிகள் கூடாது என உத்தரவிட்டது.
ஆனால் அவ்வப்போது பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது இந்த உத்தரவு மீறப்படுகிறது. இந்நிலையில் பிகில் படத்திற்காக அதிகாலை காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் பல தியேட்டர்களில் அதிகாலை சிறப்பு காட்சிக்கு முன்பதிவுகள் நடைபெற்றன.
பிகில் ஃபீவர் பிகின்ஸ் - ப்ரியா அட்லீ புரமோசன்
இந்நிலையில் பிகில் மற்றும் கைதி படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சிகள் கூடாது என தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அறிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் அவர், "சிறப்புக் காட்சிகளை ரத்து செய்யக் கூறி அறிக்கை அனுப்பப்பட்டுவிட்டது. முன்பதிவு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக கட்டணம் வசூலிப்பது கட்டுப்படுத்தப்படும்", என தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள், தங்கள் பணம் திரும்ப கிடைக்குமா எனும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.