Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
திரைத் துளி
சென்னை:
அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகும் தமிழ் பாடல்களுக்கு ரூ. 2 மட்டுமேராயல்டியாகத் தரப்படுகிறது. இது தமிழ் மொழியைக் கேவலப்படுத்துவதாக உள்ளதாகதென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கூறியுள்ளது.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கோதண்டராமையா இதுகுறித்துநிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்திலுள்ள அகில இந்திய வானொலி நிலையங்கள், தமிழ் பாடல்களைஒலிபரப்பி வருகின்றன. இந்தப் பாடல்களுக்கான ராயல்டியாக ஒரு பாடலுக்கு ரூ. 2வழங்கப்படுகிறது. இது 1960-ம் ஆண்டிலிருந்து கொடுக்கப்படுகிறது.
ஆனால் இந்தி மற்றும் ஆங்கிலப் பாடல்களுக்கு ராயல்டியாக 12 ரூபாய்வழங்கப்படுகிறது. இந்த மொழிகளை விட தமிழ் தரம் குறைந்ததாக மத்தியஒலிபரப்புத் துறை கருதுகிறதா?.
தமிழ் பாடல்களுக்கு உலக அரங்கில் ஏற்பட்டுள்ள வரவேற்பை குறைக்கும் விதமாகமத்திய அரசு செயல்படுகிறது. அனைத்து மொழிப் பாடல்களுக்கும் ஒரே மாதிரியாக,பாடலுக்கு 25 ரூபாய் என்று ராயல்டி தொகை நிர்ணயிக்கப்பட வேண்டும்.
டெல்லி, தூர்தர்ஷனின் தேசிய ஒளிபரப்பில் தமிழ் திரைப்படங்கள்ஒளிபரப்பப்படுவதில்லை. இந்தி திரைப்படங்களே வருகின்றன. ஆனால் இவ்வாறுஒளிபரப்பாகும் இந்திப் படங்களில் பெரும்பாலானவை தமிழிலிருந்து மொழி மாற்றம்செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தி திரைப்படங்களுக்கு ரூ. 10.2 லட்சம் வரை ராயல்டி அளிக்கப்படுகிறது. ஆனால்அதே சமயம் விருது பெற்ற மாநில மொழித் திரைப்படங்களுக்கோ 1லட்சம் ரூபாய்மட்டுமே ராயல்டியாக அளிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் விற்பனை வரிய 10 சதவிகிதம் என்று ஒரே அளவில்நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.