twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தனுஜா: டிஜிபியிடம் தயாரிப்பாளர் புகார் நடிகை தனுஜா விவகாரம் குறித்து டிஜிபி அலெக்சாண்டரிடம், தயாரிப்பாளர் பியாரிலால் குந்தஷா புகார் கொடுத்துள்ளார்.நடிகை தனுஜா தன்னை ஏமாற்றி ரூ. 10 லட்சம் வரை மோசடி செய்து விட்டதாக குந்தஷாவும், தன்னிடம் பாலியல் முறைகேடுகளில் குந்தஷா ஈடுபட்டதாகவும், மிரட்டிகல்யாணம் செய்து கொள்ள முயற்சித்ததாகவும் தனுஜாவும் மாறி மாறி புகார் கூறி வருகின்றனர்.தனுஜாவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டவர்களுடன் தொடர்பு உள்ளதாக குந்தஷா குண்டைத் தூக்கிப் போட இந்த விவகாரம் சூடு பிடித்தது. இந் நிலையில்தனுஜா மீதும் அவரது தாயார் மீதும் புகார் கூறி டிஜிபி அலெக்ஸாண்டரிடம் மனு கொடுத்துள்ளார் குந்தஷா.அந்தப் புகாரில், சென்னை போலீஸ் கமிஷனரிடம் நடிகை தனுஜா கொடுத்துள்ள புகாரில் என்னைப் பற்றி தவறான தகவல்களைக் கொடுத்துள்ளார். கடந்த 23.2.2005அன்று எழும்பூர் கூடுதல் பெருநகர நீதிமன்றத்தில் நான் தனுஜா மீது வழக்கு தொடர்ந்தேன்.அதில் தனுஜா என்னிடம் ரூ. 12 கோடி மோசடி செய்து விட்டதாக தெரிவித்திருந்தன்ே. அந்தப் புகாரை விசாரிக்குமாறு மத்திய குற்றப் பிரிவு போலீஸாருக்கு நீதிமன்றம்உத்தரவிட்டது. ஆனால் போலீஸார் அந்தப் புகாரை விசாரிக்காமலேயே திருப்பி அனுப்பி விட்டனர்.இந் நிலையில் கமிஷனரிடம் தனுஜா கொடுத்துள்ள புகாரில் நான் அவரை 2வது திருமணத்திற்கு வற்புறுத்தியதாக பொய்யான தகவலைக் கொடுத்துள்ளார்.உண்மையில், தனுஜாவும், அவரது தாயார் ஹேமாவதியும்தான் என்னை மோசடி செய்து ஏமாற்றினார்கள்.அவர்களது பொய்யான புகாரினால் எனது பெயர் கெட்டு விட்டது. திரையுலகில் எனக்கிருந்த மரியாதை கெட்டுப் போய் விட்டது. இந்த பிரச்சினை குறித்து போலீஸார்முழுமையாக விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார் குந்தஷா.தனுஜா புகார்: உள்ளே போகிறார் தயாரிப்பாளர்!

    By Staff
    |

    நடிகை தனுஜா விவகாரம் குறித்து டிஜிபி அலெக்சாண்டரிடம், தயாரிப்பாளர் பியாரிலால் குந்தஷா புகார் கொடுத்துள்ளார்.

    நடிகை தனுஜா தன்னை ஏமாற்றி ரூ. 10 லட்சம் வரை மோசடி செய்து விட்டதாக குந்தஷாவும், தன்னிடம் பாலியல் முறைகேடுகளில் குந்தஷா ஈடுபட்டதாகவும், மிரட்டிகல்யாணம் செய்து கொள்ள முயற்சித்ததாகவும் தனுஜாவும் மாறி மாறி புகார் கூறி வருகின்றனர்.

    தனுஜாவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டவர்களுடன் தொடர்பு உள்ளதாக குந்தஷா குண்டைத் தூக்கிப் போட இந்த விவகாரம் சூடு பிடித்தது. இந் நிலையில்தனுஜா மீதும் அவரது தாயார் மீதும் புகார் கூறி டிஜிபி அலெக்ஸாண்டரிடம் மனு கொடுத்துள்ளார் குந்தஷா.

    அந்தப் புகாரில், சென்னை போலீஸ் கமிஷனரிடம் நடிகை தனுஜா கொடுத்துள்ள புகாரில் என்னைப் பற்றி தவறான தகவல்களைக் கொடுத்துள்ளார். கடந்த 23.2.2005அன்று எழும்பூர் கூடுதல் பெருநகர நீதிமன்றத்தில் நான் தனுஜா மீது வழக்கு தொடர்ந்தேன்.

    அதில் தனுஜா என்னிடம் ரூ. 12 கோடி மோசடி செய்து விட்டதாக தெரிவித்திருந்தன்ே. அந்தப் புகாரை விசாரிக்குமாறு மத்திய குற்றப் பிரிவு போலீஸாருக்கு நீதிமன்றம்உத்தரவிட்டது. ஆனால் போலீஸார் அந்தப் புகாரை விசாரிக்காமலேயே திருப்பி அனுப்பி விட்டனர்.

    இந் நிலையில் கமிஷனரிடம் தனுஜா கொடுத்துள்ள புகாரில் நான் அவரை 2வது திருமணத்திற்கு வற்புறுத்தியதாக பொய்யான தகவலைக் கொடுத்துள்ளார்.உண்மையில், தனுஜாவும், அவரது தாயார் ஹேமாவதியும்தான் என்னை மோசடி செய்து ஏமாற்றினார்கள்.

    அவர்களது பொய்யான புகாரினால் எனது பெயர் கெட்டு விட்டது. திரையுலகில் எனக்கிருந்த மரியாதை கெட்டுப் போய் விட்டது. இந்த பிரச்சினை குறித்து போலீஸார்முழுமையாக விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார் குந்தஷா.

    தனுஜா புகார்: உள்ளே போகிறார் தயாரிப்பாளர்!

    அமைச்சருடன் தொடர்பு: தனுஜா அதிரடி!!

    தனுஜாவிடம் ஏமாந்த தயாரிப்பாளர் வழக்கு!

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X