twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தண்ணீரில் விஷம் வைத்து கொல்ல பார்த்தார்கள்..பகீர் தகவலை கிளப்பிய விஷால் படநடிகை!

    |

    சென்னை : தன்னைக் கொல்ல பலமுறை முயற்சி நடந்ததாக விஷால் பட நடிகை குற்றம் சாட்டிஉள்ளார்.

    மாடல் அழகியும் நடிகையுமான தனுஸ்ரீ தத்தா, ஆசிக் பனாயா அப்னே என்ற இந்தி படத்தின் மூலம் திரைத்துறையில் தனது பயணத்தை தொடங்கி உள்ளார்.

    அந்த படத்தை தொடர்ந்து வீரபத்ரா என்ற தெலுங்கு திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்தி ,தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிப்படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார்.

    யாஷிகாவை அப்படியே காப்பி அடிக்கும் ஐஸ்வர்யா தத்தா...வச்சு செய்யும் நெட்டிசன்கள் யாஷிகாவை அப்படியே காப்பி அடிக்கும் ஐஸ்வர்யா தத்தா...வச்சு செய்யும் நெட்டிசன்கள்

    தனுஸ்ரீ தத்தா

    தனுஸ்ரீ தத்தா

    நடிகர் விஷால் நடித்த 2010ம் ஆண்டு வெளியான தீராத விளையாட்டு பிள்ளை திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக ஜோதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற போதும் நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கு தமிழில் படவாய்ப்புகள் சரிவர அமையவில்லை.

    படுக்கையை பகிர்ந்தார்

    படுக்கையை பகிர்ந்தார்

    இதையடுத்து பாலிவுட்டுக்கு சென்ற தனுஸ்ரீ தத்தா,அங்கு பல சர்ச்சைகளில் சிக்கினார் தனுஸ்ரீ படுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா அழகிப் பட்டத்தை வென்றார் என்றும், அவருக்கு ஆண்கள் மற்றும் பெண்களுடன் உறவு கொள்ளும் குணம் கொண்டவர் என படு மோசமான குற்றச்சாட்டை ராக்சி சாவந்த் அவர் மீது கூறியிருந்தார்.

    metoo புகார்

    metoo புகார்

    இதையடுத்து, நடிகை தனுஸ்ரீ தத்தா, நானா படேகர், நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா மற்றும் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி ஆகியோர் மீது metoo புகார் அளித்தார். இதில் நடிகர் நானா படேகர் பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால், போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லாததால், அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுவிட்டது.

    கொலை முயற்சி

    கொலை முயற்சி

    இந்நிலையில், அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த தனுஸ்ரீ, மீ டூ புகார் அளித்த பிறகு தன்னைக் கொலை செய்ய முயற்சிகள் நடந்ததாகவும், தனது காரில் பலமுறை பிரேக்குகள் சேதமடைந்ததாகவும், சமீபத்தில் உஜ்ஜயினியில் உள்ள மகாகால் கோவிலுக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் சென்றேன் அப்போதும் காரின் பிரேக் செயல் இழந்ததால் விபத்தில் சிக்கினேன் என்றார்.

    தண்ணீரில் விஷம்?

    தண்ணீரில் விஷம்?

    அது மட்டுமில்லாமல், விஷம் வைத்து என்னை கொல்லவும் சதி நடந்தது, எனது வீட்டின் வேலைக்காரி நோய்வாய்ப்பட்டதால் தண்ணீரில் ஏதுவும் கலந்திருக்குமோ என சந்தேகம் எழுந்தது. இப்படி ஒரு முறை அல்ல பல முறை என்னை கொல்ல சதி நடந்துள்ளது என தனுஸ்ரீ தத்தா கூறியுள்ளார்.

    English summary
    Bollywood actress Tanushree Dutta, in a recent interview, claimed that attempts were made to kill her in different ways after she spoke about sexual harassment.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X