Don't Miss!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- News அட****** லைவ்வில் வார்த்தையை விட்ட நிருபர்! சமாளித்த ஆங்கர்..! நிருபருக்காக மன்னிப்பு கேட்ட சேனல்..!
- Lifestyle ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- Finance இந்தியாவுக்கு டேக்கா கொடுத்த எலான் மஸ்க்.. டெஸ்லா தொழிற்சாலை இப்போதைக்கு வராது..!!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விஷால் ஹீரோயினுக்கு பாலியல் தொல்லை பற்றி அமிதாப் பச்சன் என்ன இப்படி சொல்லிடாரு!!!
மும்பை: நானா படேகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை தனுஸ்ரீ தெரிவித்தது குறித்து அமிதாப் பச்சன் யாரும் எதிர்பார்க்காத பதிலை அளித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் நானா படேகர் கடந்த 2008ம் ஆண்டு ஹார்ன் ஓகே ப்ளீஸ் படத்தில் நடித்தபோது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனுஸ்ரீ தத்தா தெரிவித்தார். இந்நிலையில் 10 ஆண்டுகள் கழித்து தற்போதும் அது குறித்து அவர் பேசியுள்ளார்.
தனக்கு இப்படி ஒரு கொடுமை நடந்தும் இதுவரை யாருமே தட்டிக் கேட்கவில்லை என்று தனுஸ்ரீ பேட்டி அளித்தார்.
தனுஸ்ரீ
தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வந்த அமிதாப் பச்சனிடம் தனுஸ்ரீயின் புகார் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவரோ நான் தனுஸ்ரீயோ, நானா படேகரோ இல்லை. அப்படி இருக்கும்போது நான் எப்படி கமெண்ட் சொல்ல முடியும் என்று பதில் கேள்வி கேட்டார். அமிதாப் பச்சனின் இந்த பதிலை யாருமே எதிர்பார்க்கவில்லை.
ஆமீர் கான்
தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படத்தின் ஹீரோவான ஆமீர் கானிடமும் அமிதாபிடம் கேட்கப்பட்ட அதே கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, நடந்த சம்பவம் பற்றிய விபரம் தெரியாமல் நான் கருத்து தெரிவிக்க முடியாது. அது சரியும் அல்ல. ஆனால் இது போன்ற சம்பவங்கள் எப்பொழுது நடந்தாலும் கவலையானது. இது நடந்ததா என்பதை மக்கள் விசாரிக்க வேண்டும். நான் கருத்து தெரிவிப்பது நல்லது இல்லை என்றார்.
புகார்
ஹார்ன் ஓகே ப்ளீஸ் படத்தில் குத்துப்பாடலுக்கு ஆடியபோது தான் நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்தார் தனுஸ்ரீ. இந்நிலையில் அவர் டான்ஸ் மாஸ்டர் கணேஷ் ஆச்சார்யா பற்றி கூறியதாவது, அவர் பொய் சொல்கிறார். இரட்டை முகம் கொண்டவர். அவருக்கு என்னால் வேலை கிடைத்தது. ஆனால் என்னையே முதுகில் குத்த முடிவு செய்துவிட்டார். அவர் நானாவுக்கு தான் ஆதரவாக இருப்பார். இது போன்றவர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்கிறார் தனுஸ்ரீ.
பாலியல் தொல்லை
என் போராட்டம் நானா படேகர் அல்லது கணேஷ் ஆச்சார்யாவுக்கு எதிரானது அல்ல. அவர்களுக்கு வேலை கிடைக்கக் கூடாது. அவர்களின் செயலுக்கு அவர்கள் கஷ்டப்பட வேண்டும். பாலியல் புகார் தெரிவிப்பவர்கள் பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி உள்ளது. நம் காவல் துறை மற்றும் நீதித்துறையை அப்டேட் செய்ய வேண்டும் என்று தனுஸ்ரீ தெரிவித்துள்ளார்.