படுக்கைக்கு சென்று மிஸ் இந்தியா பட்டம் வென்றார்: தனுஸ்ரீ மீது நடிகை பரபரப்பு புகார்
Recommended Video

மும்பை: தனுஸ்ரீ தத்தா படுக்கைக்கு சென்று தான் மிஸ் இந்தியா அழகிப் பட்டம் வென்றார் என்று நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.
தனுஸ்ரீ தத்தாவுக்கும், பாலிவுட் நடிகை ராக்கி சாவந்துக்கும் இடையே பிரச்சனையாக உள்ளது. தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் தெரிவித்த நடிகர் நானா படகேருக்கு ராக்கி ஆதரவாக உள்ளார்.
இந்நிலையில் ராக்கி தனுஸ்ரீ பற்றி அதிர்ச்சி அளிக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,

10 ஆண்டுகள்
தனுஸ்ரீ தத்தாவுக்கு என் உடம்பு இன்ச், இன்சாக தெரியும். ஏனென்றால் 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர் என்னுடன் லெஸ்பியன் உறவு கொண்டார். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. தனுஸ்ரீ ஆண்கள் மற்றும் பெண்களுடன் உறவு கொள்ளும் குணம் உள்ளவர். அவர் பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவர்கள் அனைவரும் தங்களின் மீ டூ கதைகளுடன் விரைவில் வெளியே வருவார்கள்.

தனுஸ்ரீ
நான் அப்படிப்பட்டவள் இல்லை. ஆனால் தனுஸ்ரீ தான் என்னை ஓரினச்சேர்க்கையாளராக மாற்றினார். நான் பெரிய ஆளாக வர மாட்டேன் என்று நினைத்து அவர் என்னை பயன்படுத்திக் கொண்டார். அவர் செய்ததை எல்லாம் நான் வெளியே சொல்ல மாட்டேன் என்று நினைத்துவிட்டார். அவர் நினைத்தது தவறு.

படுக்கை
தனுஸ்ரீ தத்தா படுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா அழகிப் பட்டத்தை வென்றார். தனுஸ்ரீயால் என் பெயர் கெடுகிறது. எனக்கு இந்தியாவில் நல்ல பெயர் உள்ளது. எனக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது. இந்தியர்கள் என் மீது மதிப்பு வைத்துள்ளனர். ஆனால் தனுஸ்ரீ என் இமேஜை டேமேஜ் செய்கிறார். அவர் அமெரிக்காவில் இருந்து போலியான மீ டூ இயக்கத்தை கொண்டு வந்து என் இமேஜை கெடுக்கிறார். அவருக்கு இந்தியாவை பிடிக்காது, அமெரிக்கா தான் பிடிக்கும்.

சாப்பாடு
தனுஸ்ரீ தத்தா நன்றாக சாப்பிட்டு சாப்பிட்டு கொழுத்த அசிங்கமான எருமைமாடு போன்று இருக்கிறார். அவருக்கு போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. அவரிடம் பணம் இல்லாததால் அனைத்தும் இலவசமாக கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார் என தெரிவித்துள்ளார் ராக்கி சாவந்த்.


Click it and Unblock the Notifications











