Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பெப்சியில் மீண்டும் இணைக்கக்கோரி டெக்னீஷியன் யூனியன் உண்ணாவிரதம்
சென்னை : தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பெப்சி அமைப்பிற்கும் மோதல் உருவாவதற்கு மூல காரணமாக இருந்தது டெக்னீஷியன் யூனியன்.
மதுரையில் நடந்த 'பில்லா பாண்டி' படப்பிடிப்பை டெக்னீஷியன் யூனியன் நிறுத்தியது தான் அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணமாக அமைந்தது.
இதனால் சமாதானப் பேச்சு வார்த்தையின் போது தயாரிப்பாளர்கள் சங்கம் இனி ஒரு போதும் டெக்னீஷியன் யூனியனை பயன்படுத்த மாட்டோம் என்பதில் உறுதியாக இருந்தது.
பெப்சியில் இருந்து நீக்கம் :
இந்த விவகாரத்தால் தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்சிக்கும் மோதல் ஏற்பட்டு பிறகு பேச்சுவார்த்தை நடைபெற்றது. டெக்னீஷியன் யூனியன் பெப்சியிலிருந்து நீக்கப்பட்டது.
ஆட்கள் தேவை அறிவிப்பு :
அதோடு, சினிமாவில் பணிபுரிவதற்கு அனுபவம் வாய்ந்த மற்றும் புதிய டெக்னீஷியன்கள் தேவை என்கிற அறிவிப்பும் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டது.
மீண்டும் இணைக்க கோரிக்கை :
இந்நிலையில், தங்களை மீண்டும் பெப்சியில் சேர்க்கக்கோரி டெக்னீஷியன் யூனியனைச் சேர்ந்தவர்கள் அதன் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் தனபால் ஆகியோர் தலைமையில் சென்னை வள்ளூவர் கோட்டம் அருகில் உண்ணாவிரதம் இருந்தனர்.
தொடர் உண்ணாவிரதம் :
'டெக்னீஷியன் யூனியனை பெப்சி அமைப்பில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நடைமுறையில் கடந்த 2 ஆண்டுகளாக வழங்கி வந்த சம்பளத்தைத் தொடர்ந்து வழங்க வேண்டும். இந்த இரண்டையும் நிறைவேற்றாவிட்டால் செப்டம்பர் 25-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம்' எனத் தெரிவித்துள்ளனர்.