சினிமா ஆசையில் வடபழனியைச் சுற்றிக் கொண்டிருந்த இளம் பெண் பெற்றோரிடம் ஒப்படைப்பு!
சினிமா நடிகை ஆகும் ஆசையில் சென்னைக்கு வரும் இளம் பெண்களின் எண்ணிக்கை கொஞ்சமல்ல. ஒரு நாளில் நூறுக்கும் குறையாத பெண்கள் இப்படி வருகிறார்கள்.
தமிழ் நாட்டிலிருந்து மட்டுமல்ல, மும்பை, ஹைதராபாத், முக்கியமாக கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான இளம் பெண்கள் எதற்கும் தயாராக கோடம்பாக்கம், வடபழனி, திநகர் பகுதிகளில் வந்து குவிகிறார்கள்.
அப்படி வடபழனிக்கு வந்த ஒரு பெண் நந்தினி (19). திருப்பூர் அனுப்பர்பாளையம் சொந்த ஊர். ப்ளஸ்டூ படித்து முடித்ததும் சினிமாவில் நடிக்க ஆசை வந்துவிட்டது.
தோழிகள் சொன்ன ஐடியாபடி சென்னைக்கு வண்டியேறினார்.
வடபழனியில் உள்ள ஸ்டுடியோ வாசலில் நின்ற கொண்டு அங்கும் இங்கும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்த சிலர், வழி தெரியாமல் ஒரு பெண் நிற்பதாக விருகம்பாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் டேனி, நந்தினியை மீட்டு போலீசிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தார். சினிமா நடிகையாவதற்காக சென்னை வந்தேன். ஸ்டூடியோவில் வாய்ப்பு கேட்டு சென்றபோது உள்ளேவிட மறுத்து விட்டனர் என்று போலீசாரிடம் கூறியுள்ளார் (அது எந்த ஸ்டுடியோ உள்ளே விட மறுத்தது... இப்போதுதான் அத்தனை ஸ்டுடியோக்களும் ஆள் நடமாட்டமின்றி காத்து வாங்கிக் கொண்டிருக்கின்றனவே!).
அவருக்கு போலீசார் அறிவுரை கூறியதுடன், அவரது பெற்றோரை வரவழைத்து நந்தினியை ஒப்படைத்தனர்.


Click it and Unblock the Notifications