Don't Miss!
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தெலுங்கானா பிரிவினை தெலுங்குத் திரையுலகை பாதிக்குமா??
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலப் பிரிவினையால் தெலுங்குத் திரையுலகம் பாதிக்காது என்று அத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஆந்திராவைப் பிரிக்கும் முடிவைத் தொடர்ந்து பெரும் குழப்பம் தெலுங்குத் திரையுலகம் குறித்து எழுந்துள்ளது.
ஆனால் இந்தப் பிரிவினையால் தெலுங்குத் திரையுலகம் பாதிக்கப்படாது என்று அத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் உடனடியாக இழப்பு ஏதும் ஏற்படாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
ரூ. 120,000 கோடி வருவாய்
தெலுங்குத் திரையுலகம் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இத்துறை ஆண்டுக்கு ரூ. 12,000 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டுகிறது.
ஆண்டுக்கு 150 படங்கள்
தெலுங்கில் ஆண்டுக்கு 150 படங்கள் வரை தயாரிக்கப்படுகிறது.
90 வரை சென்னையில்தான்
90களுக்கு முன்பு வரை சென்னையில்தான் தெலுங்குத் திரையுலகம் செயல்பட்டு வந்தது. பின்னர்தான் ஹைதராபாத்துக்கு இடம் பெயர்ந்தது.
தெலுங்கானாக்காரர்கள் குறைவு
தெலுங்குத் திரையுலகைப் பொறுத்தவரை அதில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் கடலோர ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்தான். தெலுங்கானா போராட்டத்தின்போது கூட அதனால்தான் தெலுங்கானா போராட்டக்காரர்கள் தெலுங்குத் திரையுலகினரை குறி வைத்து எதிர்ப்பு காட்டினார்கள்.
பாதிப்பு வராது
தெலுங்கானா பிரிவினையால் தெலுங்குத் திரையுலகுக்கு உடனடி பாதிப்பு வராது என்று பிரபல தயாரிப்பாளர் தம்மரெட்டி பரத்வாஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
30 சதவீதம் விசாகப்பட்டினத்தில்தான்
மேலும் அவர் கூறுகையில்,30 சதவீத படப்பிடிப்புகள் விசாகப்பட்டனம் உள்ளிட் பிற கடலோர ஆந்திராவில்தான் நடைபெறுவதாக கூறினார்.