Don't Miss!
- Automobiles தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- News சொல்லி வச்சது போல..துர்கா ஸ்டாலின் டூ ராதா இபிஎஸ் வரை! அதெப்படிங்க ஒரே மாதிரி? தேர்தலில் சுவாரசியம்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Finance தங்கம் விலை ஏவுகணை போல் உயர்வு.. இன்று சென்னை, கோவை, மதுரையில் என்ன நிலவரம்..?!
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எம்.எல்.ஏ பதவியிலிருந்து விலகக் கோரி ஜெயசுதாவை முற்றுகையிட்டு போராட்டம்
காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவாக இருப்பவர் ஜெயசுதா. சமீபத்தில் அரசியல் ஒரு சாக்கடை என உணர்ந்து விட்டேன். இனியும் அரசியலில் நீடிக்க விரும்பவில்லை. விரைவில் விலகி விடுவேன் என்று கூறியிருந்தார் ஜெயசுதா.
இந்த நிலையில், ஜெயசுதா கரீம்நகர் மாவட்டம் ஜெகத்தியாலா பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதை அறிந்ததும் ஏராளமான தெலுங்கானா கட்சி தொண்டர்கள் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் ஜெயசுதாவை முற்றுகையிட்டு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும்படி கோரிக்கை விடுத்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக் குழுவினரை அமைதிப்படுத்திய ஜெயசுதா அவர்களிடம் பேசுகையில், நான் தெலுங்கானாவுக்கு எதிரானவள் இல்லை. நான் தெலுங்கானாவை ஆதரிக்கிறேன். விரைவில் பதவியை ராஜினாமா செய்வேன் என்றார்.
இதைக் கேட்டு அமைதி அடைந்த கூட்டத்தினர் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.