Don't Miss!
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- News "டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி?" கவர்னர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! ஆம் ஆத்மி பதிலடி.. சட்டம் சொல்வது என்ன
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
மால்களின் பார்க்கிங் கட்டணம் ரத்து... தெலங்கானாவில் இருப்பது அரசு.. இங்கே இருப்பது?
Recommended Video
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் உள்ள மால்கள் மற்றும் மல்டிப்ளெக்ஸ் அரங்குகளில் பார்க்கிங் கட்டணத்தை முறைப்படுத்தி உத்தரவு பிறப்பித்துள்ளது அந்த மாநில அரசு.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மால்களில் பார்க்கிங் கட்டணம் என்பது இல்லை. அல்லது முறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் அந்தக் கலாச்சாரத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் அமைக்கப்பட்ட அனைத்து மால்களிலும் வாகன நிறுத்தக் கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளை நடக்கிறது. அதிலும் திரையரங்குகளுடன் கூடிய மால்களில் குறைந்தபட்சம் ரூ 200 வரை வாகன நிறுத்தக் கட்டணம் பிடுங்குகிறார்கள்.
இந்த நிலையை மாற்றுமாறு எவ்வளவோ கோரிக்கைகள் எழுந்தும் அரசுகள் கண்டு கொள்ளவே இல்லை. ஆனால் தெலங்கானாவில் சந்திரசேகரராவ் தலைமையிலான அரசு, மல்டிப்ளெக்ஸ் மால்கள், ஷாப்பிங் மால்களில் வாகன நிறுத்தக் கட்டணத்தை ரத்து செய்யக் கூடிய வகையில் முறைப்படுத்தியுள்ளது.
இதன்படி, முதல் அரை மணி நேரத்துக்கு எந்த வாகனத்துக்கும் கட்டணம் கிடையாது.
அரை மணியிலிருந்து ஒரு மணி வரை, வாகன உரிமையாளர் அந்த மாலில் ஏதேனும் பொருள் வாங்கி அதற்கான ரசீதைக் காட்டினால் கட்டணம் கிடையாது.
ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக வாகனம் நிறுத்துவோர், அந்த வாகன நிறுத்துக் கட்டணத்தை விட அதிக அளவுக்கு பொருட்கள் வாங்கி, அந்த ரசீதைக் காட்டினால் போதும், கட்டணம் கிடையாது. சினிமா டிக்கெட்டும் இதில் அடங்கும்.
இந்த விதிமுறைகள் வரும் ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து ஹைதராபாத் உள்பட தெலங்கானா முழுவதும் அமலுக்கு வரும் என்றும், இதை மீறும் மால்கள் - மல்டிப்ளெக்ஸ்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.