டிவியில் இருந்து படத்துக்கு வந்த ஷாருக், மாதவன், சிவகார்த்திகேயன், வித்யா
சென்னை: தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர்கள், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர்கள் இன்று பெரிய திரையில் ஹீரோ, ஹீரோயின்களாக உள்ளனர்.
சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது என்பது அவ்வளவு எளிதன்று. சின்னத்திரைக்கு சென்றால் ஹீரோ, ஹீரோயின்களாக முடியாது என்று கூறிய காலமெல்லாம் மலை ஏறிவிட்டது.
சின்னத் திரையில் அறிமுகமாகி இன்று பெரிய திரையில் கலக்கி வரும் சில நடிகர், நடிகைகளைப் பார்ப்போம்.

ஷாருக்கான்
பாலிவுட்டின் முன்னணி நடிகராக பல ஆண்டுகளாக இருந்து வரும் ஷாருக்கான் முதன் முதலில் டிவி சீரியலில் நடித்தவர்.

மாதவன்
நம்ம சிரிப்பழகன் மாதவன் டிவி சீரியலில் இருந்து தான் சினிமாவுக்கு வந்தவர். மனிதர் 40 வயதை தாண்டியும் இன்றும் தனது சிரிப்பால் ரசிகைகளின் மனம் கவர்ந்தவாரக உள்ளார்.

வித்யா பாலன்
பரினீதா படத்தில் நடிக்கும் முன்பு வித்யா பாலன் ஹம் பாஞ்ச் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தார்.

சிவ கார்த்திகேயன்
நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த சிவ கார்த்திகேயன் இன்று கோடிகளில் சம்பளம் வாங்கும் ஹீரோ.

யாமி கௌதம்
விக்கி டோனார் படத்தில் நடிக்கும் முன்பு யாமி கௌதம் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். அவர் நடித்துள்ள கௌரவம் படம் அண்மையில் ரிலீஸானது.


Click it and Unblock the Notifications











