Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
'ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி' உட்பட டிவி சீரியல்கள் ஷூட்டிங் தொடங்கியது.. அனைவருக்கும் இன்சூரன்ஸ்!
சென்னை: சின்னத்திரை தொடர்களின் படப்பிடிப்புகள் சென்னையில் இன்று தொடங்கியது.
கொரோனா வைரஸ் காரணமாக, மத்திய அரசு லாக்டவுனை பிறப்பித்தது. இதனால், கடந்த மார்ச் இறுதி முதல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டன. சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.
பெண்குயின் டீசர்.. கீர்த்தி சுரேஷுக்கு கைகொடுக்கும்.. முன்னணி நடிகைகள்!
கட்டுப்பாடுகள்
இந்நிலையில், லாக்டவுனுக்காக பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சின்னத்திரை தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று, படப்பிடிப்புகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆரம்பத்தில் 20 பணியாளர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தது.
தயாரிப்பாளர் கோரிக்கை
இவ்வளவு பேரை வைத்துக்கொண்டு ஷூட்டிங் நடத்த முடியாது என்று சின்னத்திரை தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்றுக் கொண்ட அரசு, 60 பேர் கொண்ட குழுவுடன் படப்பிடிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்தது. இருந்தாலும் பெரும்பாலான தொடர்களுக்கான படப்பிடிப்புகள் உடனே தொடங்கப்படவில்லை.
நடிகை குஷ்பு
இந்நிலையில் வரும் 10 ஆம் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்புகளை தொடங்க முடிவு செய்துள்ளோம் என்று சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்க செயலாளரும் நடிகையுமான குஷ்பு தெரிவித்திருந்தார். அரசு வகுத்துள்ள விதிமுறை மற்றும் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
தொடர்களின் படப்பிடிப்பு
இதற்கிடையே, சின்னத்திரை தொடர்களின் படப்பிடிப்புகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் அம்மன், ஓவியா, பொன்மகள் வந்தாள், கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும், ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, விஜய் டிவியில் வரும், இதையத்தை திருடாதே ஆகிய ஐந்து தொடர்களின் படப்பிடிப்புகள் இன்று தொடங்கியுள்ளன.
அனைவருக்கும் இன்சூரன்ஸ்
இந்தப் படப்பிடிப்பில் 45-ல் இருந்து 50 பேர் வரை பங்கேற்றுள்ளனர். அனைத்து நடிகர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் தயாரிப்பாளர் தரப்பில் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் 25 சிரீயல்களின் படப்பிடிப்புகள் தொடங்க இருக்கிறது. பெப்சி தரப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.