Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி' உட்பட டிவி சீரியல்கள் ஷூட்டிங் தொடங்கியது.. அனைவருக்கும் இன்சூரன்ஸ்!
சென்னை: சின்னத்திரை தொடர்களின் படப்பிடிப்புகள் சென்னையில் இன்று தொடங்கியது.
கொரோனா வைரஸ் காரணமாக, மத்திய அரசு லாக்டவுனை பிறப்பித்தது. இதனால், கடந்த மார்ச் இறுதி முதல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டன. சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.
பெண்குயின் டீசர்.. கீர்த்தி சுரேஷுக்கு கைகொடுக்கும்.. முன்னணி நடிகைகள்!
கட்டுப்பாடுகள்
இந்நிலையில், லாக்டவுனுக்காக பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சின்னத்திரை தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று, படப்பிடிப்புகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆரம்பத்தில் 20 பணியாளர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தது.
தயாரிப்பாளர் கோரிக்கை
இவ்வளவு பேரை வைத்துக்கொண்டு ஷூட்டிங் நடத்த முடியாது என்று சின்னத்திரை தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்றுக் கொண்ட அரசு, 60 பேர் கொண்ட குழுவுடன் படப்பிடிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்தது. இருந்தாலும் பெரும்பாலான தொடர்களுக்கான படப்பிடிப்புகள் உடனே தொடங்கப்படவில்லை.
நடிகை குஷ்பு
இந்நிலையில் வரும் 10 ஆம் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்புகளை தொடங்க முடிவு செய்துள்ளோம் என்று சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்க செயலாளரும் நடிகையுமான குஷ்பு தெரிவித்திருந்தார். அரசு வகுத்துள்ள விதிமுறை மற்றும் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
தொடர்களின் படப்பிடிப்பு
இதற்கிடையே, சின்னத்திரை தொடர்களின் படப்பிடிப்புகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் அம்மன், ஓவியா, பொன்மகள் வந்தாள், கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும், ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, விஜய் டிவியில் வரும், இதையத்தை திருடாதே ஆகிய ஐந்து தொடர்களின் படப்பிடிப்புகள் இன்று தொடங்கியுள்ளன.
அனைவருக்கும் இன்சூரன்ஸ்
இந்தப் படப்பிடிப்பில் 45-ல் இருந்து 50 பேர் வரை பங்கேற்றுள்ளனர். அனைத்து நடிகர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் தயாரிப்பாளர் தரப்பில் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் 25 சிரீயல்களின் படப்பிடிப்புகள் தொடங்க இருக்கிறது. பெப்சி தரப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.