Don't Miss!
- News
இதுதான் டாடா.. A டூ Z எல்லாமே பக்கா ஸ்கெட்ச்.. மின்சார கார் சந்தையில் டாடா போடும் மெகா பிளான்
- Lifestyle
Today Rasi Palan 28 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்பிற்கான பலன் தேடி வரப்போகிறது...
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
விஜய், தனுஷ் உடன் இணைந்து நடிக்க ஆவலாக உள்ளேன்.. பிரபல தெலுங்கு நடிகர் கிரீன் சிக்னல்!
சென்னை: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார் நடிகர் ஜூனியர் என்டிஆர்.
ஜூனியர் என்டிஆர், ராம்சரன் எஸ் எஸ் ராஜமெளலி இயக்கத்தில் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது
இந்த நிலையில் இனிவரும் காலங்களில் பான் இந்திய படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் நிலையில் தனுஷ் மற்றும் விஜய்யுடன் இணைந்து நடிக்க ஆவலாக உள்ளேன் என ஜூனியர் என்டிஆர் தெரிவித்துள்ளார்
இயக்குநர்
மாரி
செல்வராஜின்
புதிய
கவிதை
தொகுப்பு...
யாரு
வெளியிட்டுருக்காருன்னு
பாருங்க!

பான் இந்திய திரைப்படமாக
பல ஆண்டுகளாக திரைத்துறையில் இருந்த மொழி என்ற தடுப்புச் சுவர்களை நொறுக்கி பான் இந்திய படங்களாக இயக்குனர்கள் தங்களது ஒவ்வொரு படங்களையும் உருவாக்கி வருகின்றனர் குறிப்பாக இயக்குனர் எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் பான் இந்திய திரைப்படங்களாக வெளியாகிறது. தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் தமிழ் நடிகர்கள் நடிக்கும் பெரும்பான்மை திரைப் படங்களும் இப்போது பான் இந்திய திரைப்படங்களாக தான் வெளியாகிறது. அந்த வகையில் விஜய்யின் மாஸ்டர் பான் இந்திய திரைப்படமாக வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.

இரண்டு முன்னணி ஹீரோக்களை
பாகுபலி என்ற பிரமாண்ட சரித்திரப் படத்தை கொடுத்த இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி அதைத் தொடர்ந்து ஆர்ஆர்ஆர் என்ற மற்றுமொரு பிரமாண்ட படத்தை கொடுத்தார். ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் என்ற இரண்டு முன்னணி ஹீரோக்களை வைத்து இயக்கியிருந்தார். மிகச் சமீபத்தில் இந்த ஆர்ஆர்ஆர் வெளியாகி இந்திய அளவில் மிகப்பெரிய வசூல் சாதனையை செய்துள்ளது. தமிழ், தெலுங்கு,மலையாளம்,கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்திய படமாக வெளியான ஆர் ஆர் ஆர் படத்தின் பிரமோஷனுக்காக படக்குழு அனைத்து மாநிலங்களுக்கும் நேரடியாக சென்று ஆதரவு திரட்டினார். அதன் பலனாக அனைத்து மொழிகளிலும் இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது

மகாபாரதம் இயக்க வேண்டும்
இந்த நிலையில் ஆர் ஆர் ஆர் பட விழாவில் பேசிய நடிகர் ஜூனியர் என்டிஆர் இப்பொழுது தமிழ் தெலுங்கு படங்கள் என்றெல்லாம் இல்லை எல்லாமே பான் இந்திய படங்களாக வெளியாகின்றன அது பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைத்து மொழிகளிலும் இருக்கும் நடிகர்களையும் சேர்த்து வைத்து ராஜமௌலி மகாபாரதம் கதையை இயக்க வேண்டும்.

இணைந்து நடிக்க ஆவலாக
தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்கள் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை அள்ளியது. இந்த நிலையில் இனிவரும் காலங்களில் பான் இந்திய படங்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும் எனவே நான் தமிழ் நடிகர்களுடன் இணைந்து நடிக்க தயாராக உள்ளேன். குறிப்பாக தனுஷ், விஜய் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடிக்க ஆவலாக உள்ளேன் என ஜூனியர் என்டிஆர் தெரிவித்துள்ளார்.