Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தெலுங்கு நடிகையை காணவில்லை... தந்தை புகார்!
ஹைதராபாத்: தெலுங்கு பட நடிகை சாய் ஸ்ரீ ஷா மாயமாகிவிட்டதாக அவரது தந்தை ஹைதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
லவ் அட்டாக் தெலுங்கு திரைப்படம் மூலம் அறிமுகமானவர் சாய் ஸ்ரீ ஷா. இவரை கடந்த மே மாதம் இறுதியில் இருந்து காணவில்லை என்று பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையில் ஸ்ரீஷாவின் தந்தை பிரசாத் ராவ் புகார் அளித்துள்ளதார்.
சாய் ஸ்ரீஷாவின் வீடு பஞ்சாரா ஹில்ஸ் ஸ்ரீநகர் காலனியில் அமைந்துள்ளது.
மே கடைசியில்
ஸ்ரீஷா கடந்த மே 27ம் தேதி தனது ஆண் நண்பருடன் வீட்டை விட்டு போனவர் பின்னர் வீடு திரும்பவில்லையாம்.
செல்போனில் பேச்சு
ஆனால் செல்போன் மூலம் பெற்றோரை தொடர்பு கொண்டு பேசிய நடிகை கடந்த 10 நாட்களாக எந்தவித தொடர்பும் கொள்ளவில்லை என்று கூறியுள்ளனர்.
போலீசில் புகார்
இதனால் பதற்றமடைந்து போலீசில் புகார் அளித்துள்ளதாக ஸ்ரீஷாவின் தந்தை தெரிவித்தார். இதனையடுத்து ஸ்ரீஷா அவரது ஆண் நண்பர் முரளியின் செல்போன் எண்களை போலீசார் பெற்றுக் கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சீரியல் நடிப்பு
ஸ்ரீஷா இப்போது தெலுங்கு டிவி சீரியல்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.