Don't Miss!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ரக்த சரித்திராவை எதிர்த்து தெலுங்கு தேசம் பெரும் ரகளை!
விவேக் ஒபராய் நடித்து, ராம்கோபால் வர்மா இயக்கத்தில் வெளியாகியுள்ள தெலுங்குப் படமான ரக்த சரித்ராவை எதிர்த்து தெலுங்கு தேசம் தொண்டர்கள் பெரும் ரகளையில் இறங்கியுள்ளனர்.
சன்ருகன் சின்ஹா, அபிமன்யுசிங், பிரியாமணி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம், இப்போது இந்தி மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ளது. ஆனால் இந்தப் படங்கள் தமிழகத்தில் வெளியாகவில்லை. இதன் தமிழ்ப் பதிப்பும் வெளியாகவில்லை.
ஆந்திரா முழுவதும் வெளியாகியுள்ள ரக்த சரித்ராவுக்கு தெலுங்கு தேசம் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
படத்தில் தெலுங்கு தேச கட்சியின் முன்னாள் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவை தவறாக சித்தரித்து உள்ளனராம். மூன்று முக்கிய காட்சிகளில் அவர் சம்பந்தப்பட்ட சீன்களை மனம் புண்படும்படி எடுத்து இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.
ரத்த சரித்திரம் படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் முன்பு தெலுங்கு தேச தொண்டர்கள் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போஸ்டர்களையும் கிழித்தெறிந்தார்கள். இதையடுத்து தியேட்டர்கள் முன்பு போலீசார் பாதுகாப் புக்காக குவிக்கப்பட்டார்கள். சில மாவட்டங்களில் இப்படம் திரையிடப்படுவது முழுமையாக நிறுத்தப்பட்டது.
போராட்டம் குறித்து ராம்கோபால் வர்மாவிடம் கேட்டபோது "என்.டி. ராமராவ் குடும்பத்தார் திரைப்படம் குறித்து ஆட்சேபம் தெரிவித்தால் அவர் தொடர்புடைய காட்சிகள் நீக்கவும் நான் தயார். கொலை செய்யப்பட்ட தெலுங்கு தேச கட்சித் தலைவர் பரிதலா ரவீந்திரன் மற்றும் அவரது எதிரிகளை மையமாக வைத்துதான் இந்த படத்தை எடுத்துள்ளேன்.." என்றார்.