Don't Miss!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- News கோதுமை பீர்.. ஒரே ஒரு பீர் பாட்டில் விலை இவ்வளவா? இப்பவே குஷியில் குடிமகன்கள்.. ஆனாலும் "இடிக்குதே"
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சினிமா 100 விழாவைப் புறக்கணிக்காதீர்கள் - தெலுங்கு நடிகர்களுக்கு ஆந்திர சினிமா வேண்டுகோள்
ஹைதராபாத்: தெலுங்கானா பிரச்சினை காரணமாக சென்னையில் நடக்கும் சினிமா நூற்றாண்டு விழாவைப் புறக்கணிக்கப் போவதாக தெலுங்கு நடிகர்கள் அறிவித்திருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அம்மாநில விநியோகஸ்தர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்திய சினிமா நூற்றாண்டு விழா சென்னையில் வருகிற 21-ந்தேதி முதல் 24-ந்தேதிவரை நடிக்கிறது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட நடிகர், நடிகைகள் பங்கேற்று கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தெலுங்கானா பிரச்சினையில் ஆந்திராவில் போராட்டங்கள் நடந்து வருவதால் தெலுங்கு நடிகர், நடிகைகள் சிலர் சினிமா நூற்றாண்டு விழாவில் பங்கேற்க மறுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க கூடாது என்றும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் தெலுங்கு திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவர் என்.வி.பிரசாத் வெளியிட்ட அறிக்கையில், "இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை கொண்டாட வேண்டும் என்று ஆறு மாதத்துக்கு முன்பு முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் முழுமையடைந்துவிட்டன.
இந்த நிலையில் தெலுங்கானா பிரச்சினையை காரணம் காட்டி நூற்றாண்டு விழாவை தெலுங்கு நடிகர்கள் புறக்கணிப்பது சரியல்ல.
நூற்றாண்டு விழா மூலம் சினிமா பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடியும். மூத்த நடிகர், நடிகைகளுக்கு மரியாதை செய்யும் விழாவாகவும் இது இருக்கும்.
மேடையில் அவர்கள் கவுரவிக்கப்படுவார்கள். எனவே தெலுங்கு நடிகர், நடிகைகள் இந்த விழாவை புறக்ககணிக்கக் கூடாது. எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும்.
ஆந்திராவில் தெலுங்கானா பிரச்சினையை மையப்படுத்தி நடக்கும் போராட்டங்களால் தெலுங்கு பட உலகம் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. பிற மாநிலங்களில் தெலுங்கு படங்கள் ஓடுகின்றன. ஆந்திராவில் திரையிட முடியவில்லை. சினிமாவை நம்பி ஆயிரக் கணக்கான குடும்பங்கள் உள்ளன. படங்களை தடுப்ப தால் அவர்கள் வாழ்க்கை பாதிக்கப்படும்," என்று கேட்டுக் கொண்டுள்ளார்.