Don't Miss!
- News துபாயை மொத்தமாக புரட்டிப்போட்ட கனமழை.. "மேக விதைப்பு" காரணமா? தமிழ்நாடு வெதர்மேன் பரபர விளக்கம்
- Lifestyle இந்த முகலாய அரசர் வாழ்க்கை முழுக்க கங்கை நீரை மட்டும்தான் குடிச்சாராம்... அதுக்கான வினோத காரணம் என்ன தெரியுமா?
- Finance இப்படியொரு திட்டம் இருப்பது தெரியுமா?! இதுல மட்டும் முதலீடு செய்யுங்கள்.. பணம் கொட்டும்..!
- Automobiles டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
- Technology பாதிக்கு பாதி விலையில் பிராண்டட் AC-க்கள்.. முழுசா 52% டிஸ்கவுண்ட்.. பட்டிதொட்டி எங்கும் ஆர்டர் பறக்குது!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
இசை உலகின் இருண்ட நாள்.. முடிந்துப்போன இசை சகாப்தம்.. எஸ்பிபியின் மரணம்.. நடிகர் சிரஞ்சீவி உருக்கம்!
ஹைதராபாத்: பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் மறைவு இசை உலகின் இருண்ட நாள் என தெலுங்கு மெகா சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
பிரபல பாடகரான எஸ்பிபியின் மரணம் ஒட்டு மொத்த சினிமாத்துறையையும் அதிர்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எஸ் பி பாலசுப்ரமணியம்.
கொரோனாவில் இருந்து மீண்டு வந்த எஸ்பிபி மாரடைப்பால் இன்று மரணமடைந்தார். அவரது மறைவு ஒவ்வொரு ரசிகரையும் தனிப்பட்ட முறையில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் சிரஞ்சீவி
திரைத்துறை பிரபலங்களும் எஸ்பிபியின் மறைவு தொடர்பாக பெரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். எஸ்பிபியின் நெருங்கிய நண்பரும், தெலுங்கு மெகா ஸ்டாரான சிரஞ்சீவி தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக தனது இரங்கலையும் தனது அதிர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இருண்ட நாள்
அவர் பதிவிட்டிருப்பதாவது, இசை உலகின் இருண்ட நாள்.. நிகரே இல்லாதே ஒரு இசை மேதை எஸ்பி பாலுகாரு.. ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது. தனிப்பட்ட முறையில் அவருக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். பாலுகாரின் குரலில் எனக்காக ஒலித்த பல பாடல்கள் என்னுடைய வெற்றிக்கு காரணம்.
மீண்டு பிறந்து வரவேண்டும்
அவருடைய குரல் பல கலாச்சாரங்களை தாண்டி இந்தியா முழுக்க ரசிகர்களை கொண்டுள்ளது. இன்னொரு எஸ்பிபி வரவே முடியாது. அவர் தான் மீண்டும் பிறந்து வந்து அவரது இடத்தை நிரப்ப வேண்டும். அவரது இழப்பால் நொறுங்கியுள்ளேன், உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும் பாலு காரு. இவ்வாறு பதிவிட்டுள்ளார் சிரஞ்சீவி.
நம்பிய சிரஞ்சீவி
பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போதே தானும் எஸ்பிபியும் எவ்வளவு நெருக்கம் என்பதை வீடியோவாக வெளியிட்டு உருகியிருந்தார் நடிகர் சிரஞ்சீவி. சீக்கிரம் வாருங்கள் பாலுகாரு, நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.