Don't Miss!
- Technology WhatsApp-ல ஸ்டேட்டஸ் போடுறீங்களா? வருது புது அப்டேட்.. டபுள் சந்தோஷத்தில் பயனர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?
- News சேலத்தில் மோடி.. அதிமுக சார்பில் பேசிய ஓ.பன்னீர் செல்வம்.. அழைப்பு விடுத்த கே.பி. ராமலிங்கம்
- Automobiles வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- Finance தங்கம் விலை தடாலடி உயர்வு.. ஒரே நாளில் 450 ரூபாய் எகிறியது.. மக்கள் அதிர்ச்சி..!
- Sports IPL 2024 CSK : ருதுராஜ் கெய்க்வாட் உடன் ஓபனிங்கில் தல தோனி? சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் ட்விஸ்ட்
- Lifestyle உடலின் இந்த பகுதிகளில் அடிக்கடி வீக்கம் ஏற்படுதா? அப்ப உங்க கல்லீரல் மோசமான நிலையில் இருக்குன்னு அர்த்தம்...
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
இசை உலகின் இருண்ட நாள்.. முடிந்துப்போன இசை சகாப்தம்.. எஸ்பிபியின் மரணம்.. நடிகர் சிரஞ்சீவி உருக்கம்!
ஹைதராபாத்: பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் மறைவு இசை உலகின் இருண்ட நாள் என தெலுங்கு மெகா சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
பிரபல பாடகரான எஸ்பிபியின் மரணம் ஒட்டு மொத்த சினிமாத்துறையையும் அதிர்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எஸ் பி பாலசுப்ரமணியம்.
கொரோனாவில் இருந்து மீண்டு வந்த எஸ்பிபி மாரடைப்பால் இன்று மரணமடைந்தார். அவரது மறைவு ஒவ்வொரு ரசிகரையும் தனிப்பட்ட முறையில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் சிரஞ்சீவி
திரைத்துறை பிரபலங்களும் எஸ்பிபியின் மறைவு தொடர்பாக பெரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். எஸ்பிபியின் நெருங்கிய நண்பரும், தெலுங்கு மெகா ஸ்டாரான சிரஞ்சீவி தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக தனது இரங்கலையும் தனது அதிர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இருண்ட நாள்
அவர் பதிவிட்டிருப்பதாவது, இசை உலகின் இருண்ட நாள்.. நிகரே இல்லாதே ஒரு இசை மேதை எஸ்பி பாலுகாரு.. ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது. தனிப்பட்ட முறையில் அவருக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். பாலுகாரின் குரலில் எனக்காக ஒலித்த பல பாடல்கள் என்னுடைய வெற்றிக்கு காரணம்.
மீண்டு பிறந்து வரவேண்டும்
அவருடைய குரல் பல கலாச்சாரங்களை தாண்டி இந்தியா முழுக்க ரசிகர்களை கொண்டுள்ளது. இன்னொரு எஸ்பிபி வரவே முடியாது. அவர் தான் மீண்டும் பிறந்து வந்து அவரது இடத்தை நிரப்ப வேண்டும். அவரது இழப்பால் நொறுங்கியுள்ளேன், உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும் பாலு காரு. இவ்வாறு பதிவிட்டுள்ளார் சிரஞ்சீவி.
நம்பிய சிரஞ்சீவி
பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போதே தானும் எஸ்பிபியும் எவ்வளவு நெருக்கம் என்பதை வீடியோவாக வெளியிட்டு உருகியிருந்தார் நடிகர் சிரஞ்சீவி. சீக்கிரம் வாருங்கள் பாலுகாரு, நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Baakiyalakshmi serial: ஓஹோ என்று மாறிய கோபியின் பிசினஸ்.. வாயெல்லாம் பல்லாகிப் போன ஈஸ்வரி!
-
ரியாவுடன் ரகசிய திருமணம்.. கேள்விக்குறியாகும் மீனாட்சியின் வாழ்க்கை.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
Silk Smitha - பெற்ற தாயையே ஒதுக்கினார் சில்க் ஸ்மிதா.. அதுதான் அவர் செய்த தவறு.. மனம் திறந்த கவர்ச்சி நடிகை