Don't Miss!
- Sports IPL 2024 :"போர் வீரன்" ஆட்டத்தால் தோல்வியடைந்த சிஎஸ்கே.. கடைசி 5 ஓவரில் நடந்த மேஜிக்.. லக்னோ வெற்றி
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இசை உலகின் இருண்ட நாள்.. முடிந்துப்போன இசை சகாப்தம்.. எஸ்பிபியின் மரணம்.. நடிகர் சிரஞ்சீவி உருக்கம்!
ஹைதராபாத்: பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் மறைவு இசை உலகின் இருண்ட நாள் என தெலுங்கு மெகா சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
பிரபல பாடகரான எஸ்பிபியின் மரணம் ஒட்டு மொத்த சினிமாத்துறையையும் அதிர்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எஸ் பி பாலசுப்ரமணியம்.
கொரோனாவில் இருந்து மீண்டு வந்த எஸ்பிபி மாரடைப்பால் இன்று மரணமடைந்தார். அவரது மறைவு ஒவ்வொரு ரசிகரையும் தனிப்பட்ட முறையில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் சிரஞ்சீவி
திரைத்துறை பிரபலங்களும் எஸ்பிபியின் மறைவு தொடர்பாக பெரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். எஸ்பிபியின் நெருங்கிய நண்பரும், தெலுங்கு மெகா ஸ்டாரான சிரஞ்சீவி தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக தனது இரங்கலையும் தனது அதிர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இருண்ட நாள்
அவர் பதிவிட்டிருப்பதாவது, இசை உலகின் இருண்ட நாள்.. நிகரே இல்லாதே ஒரு இசை மேதை எஸ்பி பாலுகாரு.. ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது. தனிப்பட்ட முறையில் அவருக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். பாலுகாரின் குரலில் எனக்காக ஒலித்த பல பாடல்கள் என்னுடைய வெற்றிக்கு காரணம்.
மீண்டு பிறந்து வரவேண்டும்
அவருடைய குரல் பல கலாச்சாரங்களை தாண்டி இந்தியா முழுக்க ரசிகர்களை கொண்டுள்ளது. இன்னொரு எஸ்பிபி வரவே முடியாது. அவர் தான் மீண்டும் பிறந்து வந்து அவரது இடத்தை நிரப்ப வேண்டும். அவரது இழப்பால் நொறுங்கியுள்ளேன், உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும் பாலு காரு. இவ்வாறு பதிவிட்டுள்ளார் சிரஞ்சீவி.
நம்பிய சிரஞ்சீவி
பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போதே தானும் எஸ்பிபியும் எவ்வளவு நெருக்கம் என்பதை வீடியோவாக வெளியிட்டு உருகியிருந்தார் நடிகர் சிரஞ்சீவி. சீக்கிரம் வாருங்கள் பாலுகாரு, நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.