மேற்கை ஏற்காதே வீழும் சூரியனே.. பாகுபலி இசையமைப்பாளரின் திடீர் முடிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சென்னை: பாகுபலி இசையமைப்பாளரின் திடீர் முடிவால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் எஸ் எஸ் ராஜமவுலி. இவரது இயக்கத்தில் ஏராளமான படங்கள் வெளியான போதும் பாகுபலி படங்கள் உலகளவில் கவனத்தை பெற்றன.
தெலுங்கு மற்றும் தமிழில் உருவாக்கப்பட்ட இப்படம், இந்தி மற்றும் மலையாள மொழிகளில் டப் செய்யப்பட்டது. பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சத்யராஜ் என பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

கீரவாணி இசையில்..
பெரும் வரபேற்பையும் வசூலையும் குவித்த இப்படத்திற்கு தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான எம்எம் கீரவாணி இசையமைத்திருந்தார். அவரது இசையில் உருவான பாடல்களும் படத்தில் இடம்பெற்ற பின்னணி இசையும் பெரும் பலமாக அமைந்தது.

ராஜமவுலியின் ஃபேவரைட்
எம்எம் கீரவாணி 30 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலியின் ஃபேவரைட் இசையமைப்பாளரான இவர், அவரது உறவினரும் ஆவார்.

ஓய்வு முடிவு
தற்போது எஸ் எஸ் ராஜமவுலி இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படத்திற்கு இசையமைத்து வருகிறார் எம்எம் கீரவாணி. தெலுங்கு சினிமாவின் இசையுலகில் உச்சம் தொட்ட இசையமைப்பாளர் கீரவாணி, இசைத்துறையில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.

ரசிகர்கள் அதிர்ச்சி
அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த எம்எம் கீரவாணி, விரைவில் இசைத்துறையில் இருந்து ஓய்வு பெற போவதாக தெரிவித்தார். அவரது இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











