Don't Miss!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Sports தம்பி! உனக்கு இது தான் கடைசி வாய்ப்பு.. ரூ.14 கோடி வீரருக்கு நெருக்கடி.. காத்திருக்கும் ஆல்ரவுண்டர்
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மதுவருந்திவிட்டு கார் பயணம்... விபத்தில் உயிரிழந்த சீரியல் நடிகை!
ஐதராபாத் : தெலுங்கில் வெப் தொடர்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துவந்த காயத்ரி என்ற நடிகை வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
83 படத்திற்கு க்ரீன் சிக்னல் தந்த மும்பை ஐகோர்ட்...ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஓடிடி
தெலுங்கு சீரியல் நடிகை
தெலுங்கில் சீரியல் மற்றும் வெப் தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் காயத்ரி. இவர் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஹோலிப் பண்டிகை கொண்டாட்டங்களில் தன்னுடைய நண்பரும் தொழிலதிபருமான ரோகித் என்பவருடன் பங்கேற்றார். ஆட்டம் பாட்டம் என களைகட்டிய அந்த கொண்டாட்டத்தில் இருவரும் மது அருந்தியுள்ளனர்.
குடிபோதையில் கார் பயணம்
இதையடுத்து அவர்கள் தங்களது வீட்டிற்கு காரில் சென்றுள்ளனர். ரோகித் குடிபோதையில் கார் ஓட்டியதாக தெரிகிறது. காயத்ரி காரில் அவருடன் பயணம் செய்துள்ளார். இதையடுத்து கச்சிபௌலி என்ற இடத்தில் மலைப்பகுதியில் ரோகித் காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.
நடிகை உயிரிழப்பு
அப்போது தறிகெட்டு வேகமாக போன கார், சாலையில் வேலை செய்துக் கொண்டிருந்த தோட்டக்காரப் பெண் மகேஸ்வரி மீது மோதி சாலையோர தடுப்பில் மோதி நொருங்கியுள்ளது. இந்த விபத்தில் மகேஸ்வரி மற்றும் காரில் அமர்ந்திருந்த காயத்ரி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நண்பர் படுகாயம்
இதையடுத்து காரை ஓட்டி சென்ற ரோகித் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்கக்ப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், ரோகித் மதுவருந்திவிட்டு வாகனத்தை ஓட்டினாரா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தெலுங்கு திரையுலகினர் அஞ்சலி
இதனிடையே, காயத்ரியின் மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர் சமூக வலைதளங்கள் மூலம் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மதுவால் ஏற்பட்டுள்ள இந்த கோர மரணம் தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.