Don't Miss!
- News நீதித்துறைக்கு பெரும் அச்சுறுத்தல்- 600 வழக்கறிஞர்கள் திடீர் கடிதம்! காங்கிரஸ் மீது மோடி பாய்ச்சல்!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
சாவி வேண்டாம், பூட்டை உடைப்பேன்: போலீசாருடன் மல்லுக்கட்டிய விஷால் கைது
Recommended Video
சென்னை: சென்னை தி. நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்துக்கு போடப்பட்ட பூட்டை உடைப்பேன் என்று மல்லுக்கட்டிய விஷால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தயாரிப்பாளர் சங்க தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, முந்தைய நிர்வாகம் வைத்திருந்த ரூ. 7 கோடி வைப்பு நிதி என்ன ஆனது என்று தெரியவில்லை, விஷால் தன்னிச்சையாக செயல்படுகிறார் என்று கூறி சென்னை தி. நகர் மற்றும் அண்ணா சாலையில் உள்ள தயாரிப்பாளர் சங்க கட்டிடங்களுக்கு சில தயாரிப்பாளர்கள் நேற்று பூட்டு போட்டனர்.
இந்நிலையில் விஷால் இன்று தி. நகர் அலுலவலகத்திற்கு வந்தார்.
விஷால்
தி. நகர் அலுவலக வாசலில் தேனாம்பேட்டை உதவி ஆணையர் கோவிந்தராஜுவுடன் விஷால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சாவியை வைத்து பூட்டை திறக்கலாம் என்று போலீசார் கூறியதற்கு விஷால் அதை ஏற்க மறுத்து பூட்டை உடைத்தே தீருவேன் என்று மல்லுக் கட்டினார். போலீசாருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கைது
பூட்டை உடைப்பது சரி அல்ல. அவ்வாறு செய்தால் கைது செய்யப்படும் என்று போலீசார் கூறியதை விஷால் கேட்கவில்லை. பூட்டை உடைக்கும் நோக்கத்தில் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றார். ஆனால் போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
பாதுகாப்பு
திருட்டு பூட்டுக்கு எதற்காக போலீசார் பாதுகாப்பு அளிக்கிறார்கள் என்று கைது செய்யப்பட்ட பிறகு விஷால் கேள்வி எழுப்பினார். பூட்டு விவகாரம் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் கதிரேசன் நேற்று தெரிவித்தார். இந்நிலையில் விஷால் பூட்டை உடைக்க முயன்றார்.
முறைகேடு
ரூ. 7 கோடி வைப்பு நிதிக்கு கணக்கு கேட்கிறார்கள் சில தயாரிப்பாளர்கள். மேலும் படங்களை வெளியிடுவதை ஒழுங்குப்படுத்த துவங்கிய கமிட்டியும் முறைப்படி செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விஷால் தயாரிப்பாளர் சங்க பக்கம் வந்தே 7 மாதங்கள் ஆகிவிட்டது என்று நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட தயாரிப்பாளர்கள் தெரிவித்த நிலையில் இன்று அவர் வந்துள்ளார்.