Don't Miss!
- News விவசாயிகளுக்கு நல்ல சேதி.. பயிர்க்கடன் தேவை? "அடங்கல்" இருக்கா? கூட்டுறவு வங்கிகளில் சூப்பர் மாற்றம்
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஒருவழியாக போலீஸ் முன் ஆஜரானார் தாடி பாலாஜி!
சென்னை: தன்னைக் குடித்துவிட்டு கொடுமைப்படுத்துவதாக மனைவி நித்யா தொடர்ந்து அளித்த புகாரைத் தொடர்ந்து, போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார் நடிகர் தாடி பாலாஜி.
பெரிய திரை, சின்னத் திரையில் காமெடி நடிகராக வலம் வரும் தாடி பாலாஜிக்கும் அவது மனைவி நித்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தனித்தனியாக வசித்து வருகிறார்கள். 2 மாதங்களுக்கு முன்பு, நித்யா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தாடி பாலாஜி மீது வன்கொடுமை புகார் அளித்தார்.
ஆனால் போலீசார் தாடி பாலாஜியை விசாரிக்கவில்லை என்று தொடர்ந்து ஊடகங்களில் பேசி வந்தார் நித்யா.
தாடி பாலாஜி குடித்து விட்டு தன்னை அடிப்பதாகக் குற்றம்சாட்டினார். ஏற்கனவே தனக்கு திருமணம் ஆகியதை மறைத்துவிட்டார், தன்னையும் குழந்தையையும் கொலை செய்ய முயன்றார் என்றெல்லாம் அவர் புகார் கூறி வந்தார்.
இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராக தாடி பாலாஜிக்கு போலீசார் அழைப்பாணை அனுப்பினர். இதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனது வழக்கறிஞருடன், தாடி பாலாஜி ஆஜரானார். அவரை போலீஸ் துணை கமிஷனர் சுதாகர் விசாரித்தார். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இந்த விசாரணை நடந்தது.