ரஜினிகாந்தைச் சந்தித்தார் தாய்லாந்து இளவரசி ராஜ்தாஸ்ரீ ஜெயம்குரா!
தாய்லாந்து இளவரசி ராஜ்தாராஸ்ரீ ஜெயம்குரா சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த்தைச் சந்தித்து நலம் விசாரித்தார்.
ரஜினிகாந்த் அவர்களின் கபாலி திரைப்படத்தின் படபிடிப்பு தாய்லாந்தில் நடந்தபோது அப்படபிடிப்பு சிறப்பாக நடைபெறுவதற்கு மிகப்பெரிய அளவில் உதவி புரிந்தார்.

அப்போது ஏற்பட்ட நட்பின் காரணமாக அவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்திப்பதற்காகவே தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சந்திப்பில், "சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு தாய்லாந்தில் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் இருப்பதாகவும் அவர் அங்கு பெரிய அளவில் பிரபலம் அடைந்துள்ளதாகவும்," கூறினார்.
இச்சந்திப்பில் வி கிரியேஷன்ஸ் தலைமை நிர்வாகி பரந்தாமன் தாணு உடனிருந்தார்.


Click it and Unblock the Notifications











