Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
மனைவியுடன் அஜித்...டிரெண்டிங் ஆகும் க்யூட்டான அரிய ஃபோட்டோ
சென்னை : அஜித் தனது 50 வது பிறந்த நாளை மே 1 அன்று கொண்டாடினார். கொரோனா பரவல் காரணமாக மிக எளிய முறையில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் அஜித் பிறந்த நாளை கொண்டாடினார். இந்த சமயத்தில் மனைவி ஷாலினியுடன் அஜித் எடுத்துக் கொண்ட க்யூட்டான ஃபோட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது அஜித்தின் 50 வது பிறந்த நாளில் அவரது வீட்டில் எடுக்கப்பட்ட ஃபோட்டோ என தகவலும் பரப்பப்படுகிறது. ஆனால் அது உண்மையா என்பது இதுவரை தெரியவில்லை. இருந்தாலும் மனைவி ஷாலினியின் பின்புறம் நின்று அஜித் சிரித்தப்படி இருக்கும் இந்த ஃபோட்டோ பலரின் மனங்களையும் ஈர்த்துள்ளது.
அஜித் மஞ்சள் நிற சட்டையிலும், ஷாலினி கருப்பு நிற உடையிலும் இருப்பது இந்த ஃபோட்டோவிற்கு கூடுதல் ஈர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அஜித்தின் பிறந்த நாளன்று வெளியிடப்பட இருந்த வலிமை ஃபஸ்ட்லுக் போஸ்டர் தள்ளிப் போனதால் ஏமாற்றத்தில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு வைரலாகும் இந்த ஃபோட்டோ உற்சாகத்தை கொடுத்துள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பு கடந்த ஓராண்டிற்கும் மேலாக நடந்து வருகிறது. ஆனால் ஃபஸ்ட்லுக் போஸ்டர், அப்டேட் என ஏதும் வெளியிடப்படாமல் இருந்தது. ஒரு வழியாக அஜித்தின் பிறந்தநாளன்று ஃபஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்திருந்தார்.
ஆனால் கொரோனா தீவிரமடைந்து வருவதால் அதுவும் தள்ளி வைக்கப்படுவதாக பிறகு போனி கபூரே அறிவித்தார். இதற்கிடையில் ஸ்பெயின் நாட்டில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ள ஒரு சண்டைக் காட்சிகள் எடுக்கப்படாமல் உள்ளதால் படத்தின் வேலைகளை முடிக்க முடியாமல் படக்குழு திணறி வருகிறது.