Don't Miss!
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
மனைவியுடன் அஜித்...டிரெண்டிங் ஆகும் க்யூட்டான அரிய ஃபோட்டோ
சென்னை : அஜித் தனது 50 வது பிறந்த நாளை மே 1 அன்று கொண்டாடினார். கொரோனா பரவல் காரணமாக மிக எளிய முறையில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் அஜித் பிறந்த நாளை கொண்டாடினார். இந்த சமயத்தில் மனைவி ஷாலினியுடன் அஜித் எடுத்துக் கொண்ட க்யூட்டான ஃபோட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது அஜித்தின் 50 வது பிறந்த நாளில் அவரது வீட்டில் எடுக்கப்பட்ட ஃபோட்டோ என தகவலும் பரப்பப்படுகிறது. ஆனால் அது உண்மையா என்பது இதுவரை தெரியவில்லை. இருந்தாலும் மனைவி ஷாலினியின் பின்புறம் நின்று அஜித் சிரித்தப்படி இருக்கும் இந்த ஃபோட்டோ பலரின் மனங்களையும் ஈர்த்துள்ளது.
அஜித் மஞ்சள் நிற சட்டையிலும், ஷாலினி கருப்பு நிற உடையிலும் இருப்பது இந்த ஃபோட்டோவிற்கு கூடுதல் ஈர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அஜித்தின் பிறந்த நாளன்று வெளியிடப்பட இருந்த வலிமை ஃபஸ்ட்லுக் போஸ்டர் தள்ளிப் போனதால் ஏமாற்றத்தில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு வைரலாகும் இந்த ஃபோட்டோ உற்சாகத்தை கொடுத்துள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பு கடந்த ஓராண்டிற்கும் மேலாக நடந்து வருகிறது. ஆனால் ஃபஸ்ட்லுக் போஸ்டர், அப்டேட் என ஏதும் வெளியிடப்படாமல் இருந்தது. ஒரு வழியாக அஜித்தின் பிறந்தநாளன்று ஃபஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்திருந்தார்.
ஆனால் கொரோனா தீவிரமடைந்து வருவதால் அதுவும் தள்ளி வைக்கப்படுவதாக பிறகு போனி கபூரே அறிவித்தார். இதற்கிடையில் ஸ்பெயின் நாட்டில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ள ஒரு சண்டைக் காட்சிகள் எடுக்கப்படாமல் உள்ளதால் படத்தின் வேலைகளை முடிக்க முடியாமல் படக்குழு திணறி வருகிறது.
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!
-
மொத்தம் ரூ.7 கோடி..ஏமாற்றி விட்டார்.. மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு!