Don't Miss!
- News அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியிலிருந்து நீக்க கோரிய வழக்கு! மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
மனைவியுடன் அஜித்...டிரெண்டிங் ஆகும் க்யூட்டான அரிய ஃபோட்டோ
சென்னை : அஜித் தனது 50 வது பிறந்த நாளை மே 1 அன்று கொண்டாடினார். கொரோனா பரவல் காரணமாக மிக எளிய முறையில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் அஜித் பிறந்த நாளை கொண்டாடினார். இந்த சமயத்தில் மனைவி ஷாலினியுடன் அஜித் எடுத்துக் கொண்ட க்யூட்டான ஃபோட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது அஜித்தின் 50 வது பிறந்த நாளில் அவரது வீட்டில் எடுக்கப்பட்ட ஃபோட்டோ என தகவலும் பரப்பப்படுகிறது. ஆனால் அது உண்மையா என்பது இதுவரை தெரியவில்லை. இருந்தாலும் மனைவி ஷாலினியின் பின்புறம் நின்று அஜித் சிரித்தப்படி இருக்கும் இந்த ஃபோட்டோ பலரின் மனங்களையும் ஈர்த்துள்ளது.
அஜித் மஞ்சள் நிற சட்டையிலும், ஷாலினி கருப்பு நிற உடையிலும் இருப்பது இந்த ஃபோட்டோவிற்கு கூடுதல் ஈர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அஜித்தின் பிறந்த நாளன்று வெளியிடப்பட இருந்த வலிமை ஃபஸ்ட்லுக் போஸ்டர் தள்ளிப் போனதால் ஏமாற்றத்தில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு வைரலாகும் இந்த ஃபோட்டோ உற்சாகத்தை கொடுத்துள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பு கடந்த ஓராண்டிற்கும் மேலாக நடந்து வருகிறது. ஆனால் ஃபஸ்ட்லுக் போஸ்டர், அப்டேட் என ஏதும் வெளியிடப்படாமல் இருந்தது. ஒரு வழியாக அஜித்தின் பிறந்தநாளன்று ஃபஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்திருந்தார்.
ஆனால் கொரோனா தீவிரமடைந்து வருவதால் அதுவும் தள்ளி வைக்கப்படுவதாக பிறகு போனி கபூரே அறிவித்தார். இதற்கிடையில் ஸ்பெயின் நாட்டில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ள ஒரு சண்டைக் காட்சிகள் எடுக்கப்படாமல் உள்ளதால் படத்தின் வேலைகளை முடிக்க முடியாமல் படக்குழு திணறி வருகிறது.