Don't Miss!
- News சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.. ஏற்புடையது இல்லை.. மோடியை நேரடியாக அட்டாக் செய்த எடப்பாடி
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்டிரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அஜித் கைகோர்க்க நினைத்த டைரக்டர்...நிறைவேறாமல் போன ஆசை
சென்னை : மலையாள திரையுலகின் முக்கிய டைரக்டர்களில் ஒருவர் கே.ஆர்.சச்சிதானந்தன். பல ஹிட் படங்களைக் கொடுத்த இவர், சிறந்த திரைக்கதை எழுத்தாளரும் கூட. இவர் கடந்த ஆண்டு ஜுன் 18 ம் தேதி உயிரிழந்தார்.
சச்சிதானந்தன் கடைசியாக இயக்கிய படம் ப்ருத்விராஜ், பிஜு மேனன் நடித்த அய்யப்பனும் கோஷியும் படம். 2020 ம் ஆண்டு ரிலீசான இந்த படம், 2020 ன் முக்கிய படங்களில் ஒன்றாக இருந்தது.
சச்சிதானந்தனை வாழ்த்திய அஜித்
பலரின் மனம் கவர்ந்த இந்த படத்தை பார்த்து விட்டு ஏராளமான பிரபலங்கள் மலையாள திரையுலகில் மட்டுமின்றி பிற மொழிகளை சேர்ந்தவர்களும் சச்சிதானந்தனை பாராட்டினர். அப்படி பாராட்டிய பிரபலங்களில் ஒருவர் நடிகர் அஜித்.
|
தனுஷ்கோடி வெளியிட்ட ரகசியம்
அய்யப்பனும் கோஷியும் படத்தை பார்த்து விட்டு சச்சிதானந்தனை போனில் தொடர்பு கொண்ட அஜித், அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு பற்றி சச்சிதானந்தனின் மனைவி தனுஷ்கோடி வீடியோ ஒன்றில் விளக்கமாக பேசி உள்ளார்.
Recommended Video
சச்சிதானந்தனை சந்திக்க நினைத்த அஜித்
தனுஷ்கோடி கூறுகையில், போனில் பேசிய அஜித், கொச்சிக்கு வந்து சச்சிதானந்தனை சந்திப்பதாக கூறினார். ஆனால் சச்சிதானந்தன், அதற்கு பதிலாக நான் சென்னை வந்து உங்களை சந்திக்கிறேன் என்றார். கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் வந்ததும் சென்னை வருவதாக கூறினார்.
அஜித்தின் நிறைவேறாத ஆசை
அப்போது, சச்சிதானந்தனுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற விரும்புவதாக அஜித் தனது ஆசையை கூறி உள்ளார். அதற்கு ஒப்புக் கொண்ட சச்சிதானந்தனும், அது தனது மிகப்பெரிய கனவு படமாக இருக்கும் என கூறி உள்ளார். இந்த தகவலை சச்சிதானந்தனின் நினைவு நாளில் கேரள அஜித் ரசிகர்கள் சோகத்துடன் பகிர்ந்துள்ளனர்.