Don't Miss!
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- News நீ ஹெல்ப்பர் கேள்வி கேட்காதே.. அரசு வண்டியில் பீர் குடித்த இபி ஆபிசர்.. மறக்க முடியாத பரிசு..வீடியோ
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
தலைவா: தியேட்டர் முன்பு கெடா வெட்டி, மொட்டை போட்ட விஜய் ரசிகர்கள்
புதுக்கோட்டை: தலைவா படம் ரிலீஸானதையொட்டி விஜய் ரசிகர்கள் ஆடு வெட்டி, மொட்டை போட்டுள்ளனர்.
தலைவா படம் கடந்த 9ம் தேதி அதாவது ரம்ஜான் அன்று ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் ரிலீஸுக்கு முந்தைய நாள் இன்ன காரணம் என்று தெரியாமல் படத்தின் ரிலீஸ் திடீர் என்று நிறுத்தப்பட்டது.
இதையடுத்து விஜய் தனது அப்பா சந்திரசேகரை அழைத்துக் கொண்டு முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க கொடநாடு சென்றார். முதல்வரை பார்க்க முடியாமல் போன வேகத்தில் திரும்பி வந்தார்.
மருத்துவமனையில் தயாரிப்பாளர்
படத்தை ரிலீஸ் செய்யக் கோரி தலைவா படத் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் முதல்வருக்கு கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் அவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஒருவழியாக ரிலீஸ்
பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து படம் ஒரு வழியாக நேற்று தமிழகம் முழுவதும் ரிலீஸ் ஆனது.
உதயம் தியேட்டர்
சென்னை உதயம் தியேட்டருக்கு தலைவா படப்பெட்டி ரதத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. விஜய் ரசிகர்கள் ஏக குஷியாக காணப்படுகின்றனர்.
ஆடு வெட்டி, மொட்டை
புதுக்கோட்டையில் உள்ள தியேட்டர் முன்பு விஜய் ரசிகர்கள் ஆடு வெட்டி, மொட்டை போட்டுக் கொண்டனர்.
பாலாபிஷேகம்
ஆடு வெட்டிய ரசிகர்கள் விஜய்யின் படத்திற்கு பாலாபிஷேகம் செய்து மகிழ்ந்தனர். படம் பல நாட்கள் ஓடத் தான் இப்படி செய்கிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.