தமிழகத்தில் 450, மலேசியாவில் 100 ஸ்கிரீன்களில் ரிலீஸாகும் 'தலைவா'
சென்னை: இளையதளபதி விஜய்யின் தலைவா படம் தமிழகத்தில் மட்டும் 450க்கும் மேற்பட்ட திரைகளில் ரிலீஸாகவிருக்கிறது.
இயக்குனர் ஏ.எல். விஜய் இளையதளபதி விஜய்யை வைத்து எடுத்துள்ள படம் தலைவா. மும்பையில் துவங்கி ஆஸ்திரேலியாவில் ஷூட்டிங் முடிந்தது. இந்நிலையில் படம் வரும் 9ம் தேதி ரம்ஜான் ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகிறது.
இந்த படம் மூலம் அமலா பால் விஜய்யுடன் முதன்முதலாக ஜோடி சேர்ந்துள்ளார். படத்தில் காமெடி சந்தானம் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யு சான்றிதழ்
தலைவா படத்திற்கு முதலில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னர் ரிவைசிங் கமிட்டிக்கு படத்தை போட்டுக் காட்டி யு சான்றிதழ் பெறப்பட்டது.

பிரமாண்ட ரிலீஸ்
தமிழகத்தில் மட்டும் தலைவா படம் 450க்கும் மேற்பட்ட ஸ்கிரீன்களில் ரிலீஸ் ஆகிறது. உலகம் முழுவதும் 4,000க்கும் மேற்பட்ட ஸ்கிரீன்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது. தலைவாவின் பிரமாண்ட ரிலீஸ் விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

மலேசியாவில் 100
தலைவா படம் மலேசியாவிலும் பிரமாண்டமாக ரிலீஸ் செய்யப்படுகிறது. அங்கு மட்டும் மொத்தம் 100 ஸ்கிரீன்களில் தலைவா ரிலீஸ் ஆகிறது.

ரம்ஜான்
ரம்ஜான் பண்டிகை அன்று இந்தி நடிகர் சல்மான் கான் தனது படங்களை ரிலீஸ் செய்து வெற்றி கண்டுள்ளார். இந்நிலையில் விஜய்யின் படம் ரம்ஜான் அன்று ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











