'பாட்டைத் திருடிட்டாங்க...' போலீசில் புகார்...- 'புரமோஷனை' ஆரம்பித்த விஜய் & டீம்!

By Shankar

சென்னை: தலைவா படத்தின் ஒரு பாடலை திருட்டுத்தனமாக சமூக வலைத் தளங்களில் வெளியிட்டுவிட்டார்கள் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இயக்குநர் விஜய் உள்ளிட்டோர் இன்று புகார் கொடுத்துள்ளனர்.

கல்லூரி மாணவர் ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக தங்கள் புகாரில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குச் சென்ற படத்தின் இயக்குநர் விஜய், தயாரிப்பாளர் சிபி சுனில் குமார் ஆகியோர் மனு ஒன்றை கமிஷனரிடம் கொடுத்தனர்.

அதில், "தலைவா படத்திலிருந்து ஒரு பாடலை சட்டவிரோதமாக சமூக வலைத் தளங்கள் மற்றும் இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த சதியின் பின்னணியில் சாய்ராம் கல்லூரியைச் சேர்ந்த அரவிந்தன் என்பவர் இருப்பதாகத் தெரிகிறது. அதற்கான ஆதாரங்களையும் இணைத்துள்ளேன். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைவா படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது. அதற்கு முன் அடுத்த வாரம் இசை வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில் படத்தின் ஒரு பாடல் மட்டும் லீக் ஆகியிருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபர விளம்பரமாக மாறியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X