Don't Miss!
- News எதிர் எதிர் துருவம்.. சர்ப்ரைஸ் மீட்டிங்.. நேருக்கு நேர் சந்தித்து அளவளாவிய தமிழிசை - பிரேமலதா!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
உடம்பு சரியில்ல.. விலகிக்கிறேன்! - 'பாஸ்' நடித்த தலைவன் பட இயக்குநர்
சசிகலாவின் அக்கா மகன் பாஸ்கரன், தன் பெயரை பாஸ் என்று மாற்றிக் கொண்டு முதன் முதலாக ஹீரோவாக நடித்த படம் தலைவன்.
இந்தப் படத்தை சித்திரைச் செல்வன் என்பவர் தயாரித்தார். டிஎஸ் ரமேஷ் செல்வன் இயக்கினார்.
இந்தப் படம் குறித்து சமீப நாட்களாக பெரும் சர்ச்சை எழுந்தது. இதில் நடித்த பாஸ்கரனை மோசடி குற்றங்களுக்காக கைது செய்தனர். அதன் தயாரிப்பாளர் சித்திரைச் செல்வனும் ரூ 1.20 கோடி மோசடி வழக்கில் சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகுவதாக ரமேஷ் செல்வன் அறிவித்துள்ளார்.
அவர் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "'டிஎஸ் ரமேஷ் செல்வன் ஆகிய நான் தமிழ்நாடு திரைப்படக்கல்லூரியில் இயக்குனர் பிரிவில் பட்டம் பெற்றுள்ளேன். எனது முதல் திரைப்படம் உளவுத்துறை, அதற்கு பிறகு ஜனனம் திரைப்படத்தை இயக்கினேன்.
இப்போது கலவரம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறேன். அது தற்போது முடிவடைந்த நிலையில் உள்ளது.
இதற்கிடையே தலைவன் என்ற திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது. இரவுபகல் பாராமல் தலைவன் திரைப்படத்தின் பணிகளை கவனித்து வந்தேன். திரைப்பட வேலைகள் அதிகமாக இருந்ததால் என்னால் எனது உடல் நிலையை கவனிக்க முடியாமல் இருந்து வந்தது.
எனது உடல் நிலையை கவனிக்காமல் பணி புரிந்து வந்ததால் எனக்கு சர்க்கரை , பிளட் பிரஷர் மற்றும் மன அழுத்தம் அதிகமாகி உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. எனது மருத்துவர் கட்டாய சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
எனவே சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியிருப்பதால் தற்போது இயக்குனராக பணிபுரியும் தலைவன் திரைப்படத்தின் இயக்குனர் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்கிறேன்.
இதனை பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி வாயிலாக அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
நெருக்கடியா?
பாஸ்கரன், படத்தின் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து கைதாகி வரும் நிலையில், ரமேஷ் செல்வன் விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.