தளபதி விஜய்யை சந்தித்த கார்த்தி... கண்டுகொள்ளாத விஜய்... உண்மை தெரிந்து பாராட்டு
சென்னை : தளபதி விஜய் மற்றும் நடிகர் கார்த்தி ஆகியோரின் சூட்டிங் சென்னையில் ஒரே படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்றது.
இந்த சூட்டிங்கின்போது தளபதி விஜய்யை அவரது படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தில் சென்று கார்த்தி சந்தித்தார்.
அப்போது அவரை தளபதி விஜய் கண்டு கொள்ளாமல் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

2வது கட்ட படப்பிடிப்பு
நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜியார்ஜியாவில் நடைபெற்றது. கொரோனா காரணமாக இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தள்ளிப்போன நிலையில் கடந்த 1ம் தேதி முதல் சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது.

விஜய், கார்த்தி சூட்டிங்
இதில் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் முதல்கட்டமாக விஜய் -பூஜா ஹெக்டே பங்கேற்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இந்நிலையில் அதே படப்பிடிப்பு தளத்தில் இரு தினங்களுக்கு முன்பு நடிகர் கார்த்திக்கின் சர்தார் படத்தின் சூட்டிங்கும் துவங்கி நடைபெற்று வருகிறது.

வித்தயாசமான கெட்டப்பில் கார்த்தி
இதில் தந்தை -மகன் என இருவேறு கெட்டப்புகளில் நடிகர் கார்த்தி நடித்து வருகிறார். ஒரு கேரக்டரில் அதிகமான தாடியுடன் வித்தியாசமான கெட்டப்பில் அவர் காணப்படுகிறார். இந்நிலையில் ஒரே படப்பிடிப்பு தளத்தில் உள்ள விஜய்யை நடிகர் கார்த்தி சென்று சந்தித்துள்ளார்.

பாராட்டிய விஜய்
ஆனால் அவர் வித்தியாசமான கெட்டப்பில் காணப்பட்டதால் அவரை அடையாளம் காணமுடியாத விஜய் அவரை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். தொடர்ந்து கார்த்தி தன்னை அறிமுகம் செய்துக் கொண்டு பேசியுள்ளார். இதையடுத்து அவரை கட்டியணைத்து விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











