விஜய் - அட்லி "தெறி" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.. "மெர்சல்" அறிவிப்பு வெளியானது!
Recommended Video

சென்னை: தளபதி 63 குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சர்கார் படத்தை அடுத்து விஜய் அட்லியின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தெறி, மெர்சலை அடுத்து அட்லி, விஜய் மூன்றாவது முறையாக சேர்ந்து பணியாற்ற உள்ளனர்.

இந்த படத்தின் ஸ்க்ரிப்ட்டை பிள்ளையார் முன்பு வைத்து கடவுளின் ஆசி பெற்றுள்ளனர். படம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
விஜய், அட்லி படத்தை தயாரிப்பதை ஏ.ஜி.எஸ். நிறுவனம் உறுதி செய்துள்ளது. படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறாராம். இது தான் இன்றைய முக்கிய அறிவிப்பு என்று ஏஜிஎஸ் தரப்பில் ட்வீட் செய்யப்பட்டுள்ளது.
அறிவிப்பை பார்த்து மகிழ்ச்சி தான் என்றாலும், புதிதாக எதுவும் கூறாததால் ரசிகர்கள் லைட்டா ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த படத்தில் தயவு செய்து கீர்த்தி சுரேஷை ஹீரோயினாக போட வேண்டாம் என்று பலர் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
பைரவா, சர்கார் என்று இரண்டு படங்களில் விஜய் ஜோடியாக நடித்துவிட்டார் கீர்த்தி. இந்நிலையில் தான் ரசிகர்கள் இப்படி ஒரு வினோத கோரிக்கையை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை அட்லி ஏற்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











