Don't Miss!
- News பலாப்பழம் ஏன் கருப்பா இருக்கு.. வேலூரில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குவாதம் செய்த மன்சூர் அலிகான்
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இன்னும் சில தினங்களில் தளபதி 65 சூட்டிங் ஆரம்பம்... தகவல்கள் வெளியாகியிருக்கு
சென்னை : தளபதி 65 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜியார்ஜியாவில் நடைபெற்று முடிந்துள்ளது.
இரண்டாவது கட்ட படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணமாக விஜய் வேண்டுகோளுக்கிணங்க நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
என்னாது வா விளையாடலாமா? பிரேமம் நாயகியை பிளே பண்ண கூப்பிடும் 'அமுல் பேபி' அமிதாஷ்!
தற்போது படத்தின் சூட்டிங் மீண்டும் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
தளபதி விஜய்யின் 47வது பிறந்தநாள் வரும் 22ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அவருடைய ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் தளபதி 65 படத்தின் தலைப்பு அல்லது ட்ரெயிலர் போன்றவற்றை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் தளபதி 66 படத்தின் அப்டேட்டிற்காகவும் காத்திருக்கின்றனர்.
தளபதி 65 குறித்த அறிவிப்பு
கடந்த ஆண்டில் விஜய்யின் பிறந்தநாளையொட்டி சன் பிக்சர்ஸ் சார்பில் அவரது தளபதி 65 படத்தின் அறிவிப்பு வெளியானது. மேலும் அவர் நெல்சன் திலீப்குமாருடன் முதல் முறையாக இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டது.
ரசிகர்கள் கொண்டாட்டம்
அந்த நேரத்தில் விஜய் பிறந்தநாளின் ட்ரீட்டாக இதை கொண்டாடினார்கள் ரசிகர்கள். தற்போது இந்த பிறந்தநாளில் இந்த படத்தின் சூட்டிங் நடைபெற்று வரும் நிலையில் படக்குழுவினர் என்னமாதிரியான ட்ரீட்டை தங்களுக்கு தருவார்கள் என்றும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
நிறுத்தப்பட்ட சூட்டிங்
இந்த படத்தின் சூட்டிங் முதல் கட்டமாக ஜியார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது. இங்கு இரண்டாவது கட்ட சூட்டிங்கிற்கான செட்கள் போடப்பட்டு வந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக அதை நிறுத்தி வைக்க நடிகர் விஜய் கேட்டுக் கொண்டார். நிலைமை ஓரளவிற்கு நார்மலான உடன் சூட்டிங்கை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
பாடல் காட்சி படப்பிடிப்பு
இதையடுத்து சூட்டிங் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் வரும் ஜூலை 1ம் தேதி முதல் மீண்டும் சூட்டிங் துவங்கவுள்ளதாக தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டுள்ளது. முதலில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே பங்குபெறும் பாடல் காட்சியின் படப்பிடிப்பு பிரபல ஸ்டூடியோவில் எடுக்கப்பட உள்ளதாகவும் இதற்கான செட்கள் தற்போது போடப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.
-
அஜித் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட்?.. அப்டேட்ஸ் வருதாம்
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!
-
உத்தம வில்லன் படத்தால் பேரிழப்பு.. கொடுத்த வாக்கை இன்னும் கமல்ஹாசன் காப்பாத்தல.. லிங்குசாமி ஆதங்கம்!