Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
தள்ளி போகும் தளபதி 65 படப்பிடிப்பு.... விஜய் எடுத்த முக்கிய முடிவு... சிறப்பான சம்பவம்!
சென்னை : தளபதி 65 படத்தின் முதல் ஷெட்யூலை ஜியார்ஜியாவில் முடித்துவிட்டு திரும்பியுள்ளது படக்குழு.
இரண்டாவது ஷெட்யூலுக்கான செட்கள் அமைக்கும் பணிகளில் தொழில்நுட்ப கலைஞர்கள் ஈடுபட்டிருந்தனர்.
ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்றேன்... கொரோனா பாதிப்புக்கு ரூ.1 கோடி நிதியளித்த பாலிவுட் நடிகர்
இந்நிலையில் படம் குறித்த முக்கியமான முடிவை நடிகர் விஜய் தற்போது எடுத்துள்ளார்.
முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்தது
தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாகி நல்ல வசூலையும் வரவேற்பையும் பெற்றது. இதையடுத்து கொரோனா சூழலிலும் தனது அடுத்த படமான தளபதி 65 படத்தின் அறிவிப்பை வெளியிட்டு முதல்கட்ட படப்பிடிப்பை ஜியார்ஜியாவில் முடித்துவிட்டு வந்துள்ளார் நடிகர் விஜய்.
மிகுந்த எதிர்பார்ப்பு
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படமும் விஜய்யின் மற்ற படங்களை போலவே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது ரசிகர்கள் இந்த படத்திற்காகவும் விருப்பத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது ஷெட்யூல் மே மாதத்தில் துவங்கும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
நடிகர் விஜய் முக்கிய முடிவு
இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே இதற்கான செட்கள் அமைக்கும் பணிகளில் தொழில்நுட்ப கலைஞர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இதுகுறித்த முக்கிய முடிவை நடிகர் விஜய் எடுத்துள்ளார்.
நிறுத்த கூறிய நடிகர் விஜய்
செட்களை அமைக்கும் பணிகளை தற்போது நிறுத்தும்படி நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். தொழிலாளர்கள் கொரோனாவால் பாதிக்காதவகையிலும் அவர்களது நலனை கருத்தில் கொண்டும் நடிகர் விஜய் இந்த முடிவை எடுத்துள்ளார். இதனால் தற்காலிகமாக இந்த வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
2வது ஷெட்யூல் தள்ளி போகும்
இதனால் இரண்டாவது ஷெட்யூல் துவங்கும் பணிகள் தற்போது நடைபெற வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது. இரண்டாவது ஷெட்யூலில் நடிகை பூஜா ஹெக்டே மற்றும் படத்தின் வில்லனாக நடிக்கவுள்ள டைரக்டர் செல்வராகவன் ஆகியோர் இணைவார்கள் என்று கூறப்பட்டுள்ள நிலையில், தற்போது படப்பிடிப்பு தள்ளி போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.