twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் டிராமா பண்ணல.. எனக்கு டிராமா பண்ண தெரியாது… குமுறி அழுத தாமரை

    |

    சென்னை : பிக் பாஸ் வீட்டில் தற்போது 12 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.

    உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி என்ற தலைப்பில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

    இன்றை எபிசோடில் கிச்சன் ஏரியாவில் பிரியங்காவை கட்டிப்பிடித்து குமுறி அழகிறார் தாமரை.

    அவரது மரணத்தால் 2 நாட்கள் தூங்காமல் தவித்தேன் புனித் ராஜ்குமார் புகழஞ்சலி கூட்டத்தில் கலங்கிய விஷால்அவரது மரணத்தால் 2 நாட்கள் தூங்காமல் தவித்தேன் புனித் ராஜ்குமார் புகழஞ்சலி கூட்டத்தில் கலங்கிய விஷால்

    பிக் பாஸ் சீசன் 5

    பிக் பாஸ் சீசன் 5

    பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இந்த வாரக் கேப்டனாக பிரியங்கா இருக்கிறார். கடந்த 5வாரங்களாக தலைவர் பதவியை கைப்பற்ற அவர் பல முறை முயற்சி செய்தால் ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தன. இறுதியாக சாய நீர் டாஸ்கில் வெற்றி பெற்று இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவர் ஆனார்.

    டிராமா வேண்டாம்

    டிராமா வேண்டாம்

    இதையடுத்து, பிரியங்கா தலைவர் என்கிற முறையில், தாமரையிடம், நேற்று சாதத்தை பார்த்து செய்து இருக்கலாம், இவ்வளவு சாதம் மிச்சம் ஆகி விட்டது என்று கூறுகிறார். அப்போது குறுக்கிட்ட ராஜு சரி விடுங்க, அப்புறம் அவங்க சமைக்க வரமாட்டாங்க என்கிறார். இதையடுத்து பிரியங்கா, டிராமா எல்லாம் போட வேண்டாம் வேலைய பாருங்க என்று கூறுகிறார்.

    அழுத தாமரை

    அழுத தாமரை

    இதனால், முகம் வாடிப்போன தாமரை, சாப்பாட்டை நான் பார்த்துத்தான் வடித்தேன், நைட் யாரும் சரியா சாப்பிடல என்று கூறுகிறார். மேலும், நான் டிராமா எல்லாம் பண்ணல பிரியங்கா நீ அப்படி சொல்லும் போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, உண்மையில் நான் டிராமா பண்ணல எனக்கு டிராமா பண்ணத் தெரியாது என்று குமுறி அழுகிறார்.

    சமாதானப்படுத்திய பிரியங்கா

    சமாதானப்படுத்திய பிரியங்கா

    உடனே பிரியங்கா, தாமரை முதலில் டிராமானா எண்ணணு தெரிஞ்சிங்கோ, நான் சொன்னதோட அர்த்தம் பிரச்சினை வேண்டாம் என்று, நீ டிராமா பண்றனு நான் சொல்ல புரிஞ்சிக்கோ தாமரை என்கிறார். மேலும், சாப்பாட்டு விஷயத்துல நீ ரொம்ப சென்சிடிவ்னு எனக்கு தெரியும் , அழுது வடிந்துக்கொண்டு இருந்த தாமரையை கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து சமாதானப்படுத்தினார் பிரியங்கா.

    கண்ணாடி டாஸ்க்

    கண்ணாடி டாஸ்க்

    கண்ணாடி டாஸ்கில் தாமரையின் பிம்பமாக பிரியங்கா இருந்தார். இதனால், பிரியங்கா தாமரைப்போல சுடிதார் போட்டு, நெற்றியில் பட்டைபோட்டு அவரை செய்வதை அப்படியே செய்து வந்தார்.

    English summary
    Bigg Boss tamil season 5 : Thamarai cried at bigg Boss house
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X