Don't Miss!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சூர்யாவை நினைச்சிக்கிட்டே எழுதுவேன்...! - தாமரை
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, காஜல் அகர்வால் ஜோடியாக நடித்து வருகிற மாற்றான் படத்தின் பாடல்கள் குறித்து சமீபத்தில் பேசிய கவிஞர் தாமரை, சூர்யா குறித்துப் பேசும்போது ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டார்.
அவர் கூறுகையில், "அது என்னமோ சூர்யாவுக்கு பாட்டு எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும். அவருக்கு எழுதும்போது, அவரை நினைத்தபடிதான் வரிகளை எழுதுவேன். இந்த வரிகளைப் பாடி நடிக்கும் போது சூர்யாவின் முகபாவணை எப்படி இருக்கும் என்பதை மனத் திரையில் கற்பனை செய்துகொண்டே தான் எழுதுவேன்.
காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்களில் என் பாடல்களுக்கு சூர்யா காட்டிய உணர்வுகள் அத்தனை அழகாக இருந்தன. இந்தப் படத்தில் 'யாரோ யாரோ' பாடலையும் சூர்யாவை நினைத்தபடிதான் எழுதினேன். சூர்யா மிகச் சிறந்த நடிகர் என்பதால் பாடல் நன்றாகவே வந்துள்ளது," என்றார்.
அப்ப மத்த நடிகர்களுக்கென்றால் எந்திரத்தனமாக எழுதிவிடுவாரோ!