Don't Miss!
- News உயிரைக் கொல்லும் ஸ்மோக் பிஸ்கட்! இவ்வளவு பாதிப்பு தருமா? தடை எப்போது?
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
உண்மையை கூறிய இயக்குனர்கள்... மேடையில் அழுத தம்பி ராமையா!
பிரபல இயக்குனர்கள் பேசியதை கேட்டு நடிகர் தம்பி ராமையா கண்கலங்கினார்.
Recommended Video
சென்னை: 'மணியார் குடும்பம்' பட விழாவில் பிரபு சாலமன், சேரன் உள்ளிட்ட இயக்குனர்கள் பேசியதை கேட்டு நடிகர் தம்பி ராமையா மேடையிலேயே கண்கலங்கினார்.
வி.யு.சினிமாஸ் சார்பில் தேன்மொழி சுக்ரா தயாரித்து, நடிகர் தம்பி ராமையா இயக்கி, இசையமைத்துள்ள படம் மணியார் குடும்பம். தம்பி ராமையாவின் மகன் உமாபதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக புதுமுகம் மிருதுளா, யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
'மணியார் குடும்பம்' படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றுது. பிரபல இயக்குனர்கள் பாக்கியராஜ், சேரன், பிரபு சாலமன், மோகன் ராஜா, கரு.பழனியப்பன், சிறுத்தை சிவா, கௌரவ், நடிகர் சூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு, டிரெய்லர் மற்றும் இசையை வெளியிட்டனர்.
விழாவில் பேசிய இயக்குனர் பிரபு சாலமன், மைனா படத்திற்குள் தம்பி ராமையா எப்படி வந்தார், அவர் பட்ட கஷ்டங்கள் என்ன என்பது குறித்து நினைவு கூர்ந்தார். அதேபோல, சேரன் பேசும்போது, தம்பி ராமையா தனது தாய் மீது வைத்திருக்கும் பாசம் குறித்து பேசினார். கரு.பழனியப்பன், அவரது மனைவி குறித்து பேசினார். இவர்கள் பேசும் போது, மேடையிலேயே கண்கலங்கினார். இது விழாவுக்கு வந்த அனைவரையும் நெகிழ வைத்தது.