Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
உண்மையை கூறிய இயக்குனர்கள்... மேடையில் அழுத தம்பி ராமையா!
பிரபல இயக்குனர்கள் பேசியதை கேட்டு நடிகர் தம்பி ராமையா கண்கலங்கினார்.
Recommended Video
சென்னை: 'மணியார் குடும்பம்' பட விழாவில் பிரபு சாலமன், சேரன் உள்ளிட்ட இயக்குனர்கள் பேசியதை கேட்டு நடிகர் தம்பி ராமையா மேடையிலேயே கண்கலங்கினார்.
வி.யு.சினிமாஸ் சார்பில் தேன்மொழி சுக்ரா தயாரித்து, நடிகர் தம்பி ராமையா இயக்கி, இசையமைத்துள்ள படம் மணியார் குடும்பம். தம்பி ராமையாவின் மகன் உமாபதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக புதுமுகம் மிருதுளா, யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
'மணியார் குடும்பம்' படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றுது. பிரபல இயக்குனர்கள் பாக்கியராஜ், சேரன், பிரபு சாலமன், மோகன் ராஜா, கரு.பழனியப்பன், சிறுத்தை சிவா, கௌரவ், நடிகர் சூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு, டிரெய்லர் மற்றும் இசையை வெளியிட்டனர்.
விழாவில் பேசிய இயக்குனர் பிரபு சாலமன், மைனா படத்திற்குள் தம்பி ராமையா எப்படி வந்தார், அவர் பட்ட கஷ்டங்கள் என்ன என்பது குறித்து நினைவு கூர்ந்தார். அதேபோல, சேரன் பேசும்போது, தம்பி ராமையா தனது தாய் மீது வைத்திருக்கும் பாசம் குறித்து பேசினார். கரு.பழனியப்பன், அவரது மனைவி குறித்து பேசினார். இவர்கள் பேசும் போது, மேடையிலேயே கண்கலங்கினார். இது விழாவுக்கு வந்த அனைவரையும் நெகிழ வைத்தது.