Don't Miss!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே கேப்டன் ருதுராஜுக்கு வந்த சிக்கல்.. ஆறு மேட்ச்சிலும் ஒரே மாதிரியாக நடந்த நிகழ்வு
- News தமிழகத்தின் 11 ஸ்டார் தொகுதிகளில் ஓட்டு சதவீதம் எவ்வளவு தெரியுமா? இதோ லிஸ்ட்
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Lifestyle நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- Technology Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
மகனுக்காக மீண்டும் இயக்குநராகும் தம்பி ராமையா! - என்ன கதை?
சென்னை : நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ஹீரோவாக அறிமுகமான 'அதாகப்பட்டது மகாஜனங்களே' படம் சில மாதங்களுக்கு முன்பு ரிலீஸானது. ஆனால், அந்தப் படம் சரியாகப் போகவில்லை.
இந்நிலையில், தம்பி ராமையா தனது மகனை நாயகனாக வைத்து 'உலகம் விலைக்கு வருது' எனும் படத்தை இயக்கவிருக்கிறார்.
இந்தப் படத்தின் ஷூட்டிங் நவம்பர் 1-ம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது எனக் கூறியுள்ளார் தம்பி ராமையா.
இயக்குநர் தம்பி ராமையா :
முரளி நடித்த 'மனுநீதி' படத்தின் முலம் இயக்குனராக சினிமாவில் அடியெடுத்து வைத்த தம்பி ராமையா, வடிவேலுவை ஹீரோவாக வைத்து 'இந்திரலோகத்தில் நா அழகப்பன்' எனும் படத்தை இயக்கினார்.
குணச்சித்திர நடிகர் :
'மைனா' படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகர் தம்பி ராமையா, காமெடியனாக மட்டுமில்லாமல், குணச்சித்திர நடிகராகவும் சினிமாவில் கலக்கி வருகிறார்.
மீண்டும் இயக்கம் :
இவர் தற்போது தன் மகன் உமாபதியை வைத்து 'உலகம் விலைக்கு வருது' படத்தை இயக்கவிருக்கிறார். இதில் சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் எனப் பலரும் நடிக்கிறார்கள். ஹீரோயினுக்கான செலக்ஷன் நடைபெற்று வருகிறதாம்.
சார்லி சாப்ளின் :
இந்தப் படம், உலகப்புகழ் பெற்ற நடிகர் சார்லி சாப்ளினின் 'மழை பெய்யும்போது குடை பிடிக்காமல் நடந்துபோவது பிடிக்கும். அப்போதுதான், நான் அழுவது யாருக்கும் தெரியாது' (I love to walk in the rain because nobody can see my tears) என்ற வரிகளை மையப்படுத்திய படமாம்.