Don't Miss!
- News ஏழை பெண்களுக்கு ரூ1 லட்சம், அரசு பணிகளில் பெண்களுக்கு 50%-இன்று வெளியாகும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
- Finance ரூ.10 லட்சத்திற்கு கீழ் கிடைக்கும் செகண்ட்ஹேண்ட் கார் கார்கள்? உங்களின் சாய்ஸ் எது?
- Sports "ரோஹித் எனக்கு கீழ் ஆடுவது".. எல்லை மீறிவிட்டார் ஹர்திக் பாண்டியா.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- Automobiles கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஆண்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த 6 விஷயங்களை அவசியம் தெரிஞ்சு வைச்சுக்கணுமாம்...!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
மகனுக்காக மீண்டும் இயக்குநராகும் தம்பி ராமையா! - என்ன கதை?
சென்னை : நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ஹீரோவாக அறிமுகமான 'அதாகப்பட்டது மகாஜனங்களே' படம் சில மாதங்களுக்கு முன்பு ரிலீஸானது. ஆனால், அந்தப் படம் சரியாகப் போகவில்லை.
இந்நிலையில், தம்பி ராமையா தனது மகனை நாயகனாக வைத்து 'உலகம் விலைக்கு வருது' எனும் படத்தை இயக்கவிருக்கிறார்.
இந்தப் படத்தின் ஷூட்டிங் நவம்பர் 1-ம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது எனக் கூறியுள்ளார் தம்பி ராமையா.
இயக்குநர் தம்பி ராமையா :
முரளி நடித்த 'மனுநீதி' படத்தின் முலம் இயக்குனராக சினிமாவில் அடியெடுத்து வைத்த தம்பி ராமையா, வடிவேலுவை ஹீரோவாக வைத்து 'இந்திரலோகத்தில் நா அழகப்பன்' எனும் படத்தை இயக்கினார்.
குணச்சித்திர நடிகர் :
'மைனா' படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகர் தம்பி ராமையா, காமெடியனாக மட்டுமில்லாமல், குணச்சித்திர நடிகராகவும் சினிமாவில் கலக்கி வருகிறார்.
மீண்டும் இயக்கம் :
இவர் தற்போது தன் மகன் உமாபதியை வைத்து 'உலகம் விலைக்கு வருது' படத்தை இயக்கவிருக்கிறார். இதில் சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் எனப் பலரும் நடிக்கிறார்கள். ஹீரோயினுக்கான செலக்ஷன் நடைபெற்று வருகிறதாம்.
சார்லி சாப்ளின் :
இந்தப் படம், உலகப்புகழ் பெற்ற நடிகர் சார்லி சாப்ளினின் 'மழை பெய்யும்போது குடை பிடிக்காமல் நடந்துபோவது பிடிக்கும். அப்போதுதான், நான் அழுவது யாருக்கும் தெரியாது' (I love to walk in the rain because nobody can see my tears) என்ற வரிகளை மையப்படுத்திய படமாம்.