Don't Miss!
- News முஸ்லீம்.. ஹனுமான்.. லோக்சபா தேர்தலில் பிரச்சார ஸ்டைலை மாற்றிய மோடி.. பாஜக எடுத்த "அஸ்திரம்"
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி.. OTP மோசடி-க்கு முடிவு..!!
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மகனுக்காக மீண்டும் இயக்குநராகும் தம்பி ராமையா! - என்ன கதை?
சென்னை : நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ஹீரோவாக அறிமுகமான 'அதாகப்பட்டது மகாஜனங்களே' படம் சில மாதங்களுக்கு முன்பு ரிலீஸானது. ஆனால், அந்தப் படம் சரியாகப் போகவில்லை.
இந்நிலையில், தம்பி ராமையா தனது மகனை நாயகனாக வைத்து 'உலகம் விலைக்கு வருது' எனும் படத்தை இயக்கவிருக்கிறார்.
இந்தப் படத்தின் ஷூட்டிங் நவம்பர் 1-ம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது எனக் கூறியுள்ளார் தம்பி ராமையா.
இயக்குநர் தம்பி ராமையா :
முரளி நடித்த 'மனுநீதி' படத்தின் முலம் இயக்குனராக சினிமாவில் அடியெடுத்து வைத்த தம்பி ராமையா, வடிவேலுவை ஹீரோவாக வைத்து 'இந்திரலோகத்தில் நா அழகப்பன்' எனும் படத்தை இயக்கினார்.
குணச்சித்திர நடிகர் :
'மைனா' படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகர் தம்பி ராமையா, காமெடியனாக மட்டுமில்லாமல், குணச்சித்திர நடிகராகவும் சினிமாவில் கலக்கி வருகிறார்.
மீண்டும் இயக்கம் :
இவர் தற்போது தன் மகன் உமாபதியை வைத்து 'உலகம் விலைக்கு வருது' படத்தை இயக்கவிருக்கிறார். இதில் சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் எனப் பலரும் நடிக்கிறார்கள். ஹீரோயினுக்கான செலக்ஷன் நடைபெற்று வருகிறதாம்.
சார்லி சாப்ளின் :
இந்தப் படம், உலகப்புகழ் பெற்ற நடிகர் சார்லி சாப்ளினின் 'மழை பெய்யும்போது குடை பிடிக்காமல் நடந்துபோவது பிடிக்கும். அப்போதுதான், நான் அழுவது யாருக்கும் தெரியாது' (I love to walk in the rain because nobody can see my tears) என்ற வரிகளை மையப்படுத்திய படமாம்.