Don't Miss!
- News வரிசையில் நின்று வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி.. ஓட்டு போட்ட பின்னர் வைத்த முக்கிய கோரிக்கை!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தேள் கொட்டிய திருடர்கள்! - தங்கர் பச்சான்
நம்மைப் பாதுகாக்கத்தான் இவர்கள் இருக்கிறார்கள் என எண்ணியபோது நமக்குத் தெரியாத வழிகளில் திருடினார்கள்!
பின், நம்மை பாதுகாக்கிறோம் என சொல்லிக்கொண்டே நம்மிடமிருந்து திருடியதிலிருந்தே நமக்கு பங்கு கொடுத்தார்கள்!
நாமும் மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டோம்!
இப்போது அந்தத் திருடர்கள் நம் வீட்டையே சொந்தமாக்கிக் கொண்டார்கள்!
எனவே நம் வீட்டு சாவி இப்போது அவர்கள் கையில் என்பதால் விரும்பியதையெல்லாம் திருடிக்கொள்ளலாம்!
கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள் எனத்தெரிந்தும் நாம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்!
திருடியதிலிருந்து பங்கு வாங்கியவர்கள் என்பதால் யாரிடத்திலும் போய் முறையிடவும் முடியவில்லை!
முறையிட்டாலும், நடவடிக்கை எடுப்பான் என நினைப்பவனும் பெரிய திருடனாக இருக்கிறான்.
நாம் இப்போது என்ன செய்வது? இதுதான் ஒவ்வொருவரின் கேள்வியும்!
தேள் கொட்டி விட்டால் திருடன் கத்த முடியுமா? அதுதான் தற்போதைய நிலை!
எல்லாவற்றையும் பறி கொடுத்தாலும் நாளையும் இருப்பதிலேயே பெரியத் திருடனாகப் பார்த்துதான் அவர்களையே காவல் வைப்போம்!
ஏனென்றால் நாம் எல்லாம் தெரிந்தவர்கள்.
- தங்கர் பச்சான்